பாலாற்றில் தடுப்பணையை உயர்த்தும் ஆந்திரா.. மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை.. விவசாயிகள் புகார்
வேலூர்: ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே கட்டியுள்ள தடுப்பணையின் உயரத்தை அதிகரிப்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
பாலாற்றின் கங்குந்தி என்ற இடத்தில் 22 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் உயரத்தை 40 அடியாக அதிகரிக்கும் பணியில் ஆந்திர அரசு இறங்கியுள்ளது. ஆனால் இதனை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாகும்.

தமிழக அரசு தலையிட்டு பாலாறு தடுப்பணை உயர்த்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தை முன்னெடுப்போம் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
இதுபற்றி பேசிய தேசிய நீர்நிலை பாதுகாப்பு குழு பாலாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் உயரத்தை அதிகரிப்பதை எதிர்த்து வழக்கு தொடர உள்ளதாக குறிப்பிட்டனர்.
பாலாறு என்பது வேலூர் மாவட்டத்திற்கு முத்தாய்ப்பாக இருக்க கூடிய ஆறு. இதில் உள்ள தடுப்பணையின் உயரத்தை அதிகரிப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு நெருக்கடி அளித்து ஆந்திர அரசை கண்டிக்க வேண்டும், மேலும் தமிழக அரசு இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆந்திர அரசு பாலாற்றில் மேலும் 33 இடங்களில் தடுப்பணை கட்ட முடிவு செய்துள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். ஆந்திர அரசின் நடவடிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தடுக்க தவறினால், விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications