பாலாற்றில் தடுப்பணையை உயர்த்தும் ஆந்திரா.. மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை.. விவசாயிகள் புகார்
வேலூர்: ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே கட்டியுள்ள தடுப்பணையின் உயரத்தை அதிகரிப்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
பாலாற்றின் கங்குந்தி என்ற இடத்தில் 22 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் உயரத்தை 40 அடியாக அதிகரிக்கும் பணியில் ஆந்திர அரசு இறங்கியுள்ளது. ஆனால் இதனை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாகும்.

தமிழக அரசு தலையிட்டு பாலாறு தடுப்பணை உயர்த்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தை முன்னெடுப்போம் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
இதுபற்றி பேசிய தேசிய நீர்நிலை பாதுகாப்பு குழு பாலாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் உயரத்தை அதிகரிப்பதை எதிர்த்து வழக்கு தொடர உள்ளதாக குறிப்பிட்டனர்.
பாலாறு என்பது வேலூர் மாவட்டத்திற்கு முத்தாய்ப்பாக இருக்க கூடிய ஆறு. இதில் உள்ள தடுப்பணையின் உயரத்தை அதிகரிப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு நெருக்கடி அளித்து ஆந்திர அரசை கண்டிக்க வேண்டும், மேலும் தமிழக அரசு இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆந்திர அரசு பாலாற்றில் மேலும் 33 இடங்களில் தடுப்பணை கட்ட முடிவு செய்துள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். ஆந்திர அரசின் நடவடிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தடுக்க தவறினால், விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications