ஹிட்லர் யூதர்களை அழித்தார்.. இவங்க.. இஸ்லாமியர்களை குறி வைக்கிறாங்க.. துரைமுருகன் பரபரப்பு பேச்சு
சிஏஏவுக்கு எதிராக துரைமுருகன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்
Recommended Video
வேலூர்: "ஹிட்லர் யூதர்களை அழித்தார். இவங்க இஸ்லாமியர்களை குறி வெக்கிறாங்க.. ஹிட்லருக்கும், இவங்களுக்கும் என்ன வித்தியாசம்? இப்போ ஒரு இனத்தையே அழிக்க பார்க்கிறாங்க" என்று திமுக பொருளாளரும் மூத்த தலைவருமான துரைமுருகன் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தினார்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்து வருகின்றன.. இவை இரண்டுமே இன்றுவரை பேசுபொருளாக தேசத்தில் உருவெடுத்து வருகின்றன.
மாணவர்கள் முதல் மாநில கட்சிகள் வரை தங்களது எதிர்ப்புகளை பேரணி, ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில், மனித நேய மக்கள் கட்சி மாநாடு நடத்தி, இதற்கான எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது.

பொருளாளர்
இந்த மாநாடு வேலூர் மண்டித்தெருவில் நடைபெற்றது.. அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இதற்கு தலைமை தாங்கினார்... திமுக பொருளாளர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

தாய்நாடு
அப்போது துரைமுருகன் பேசியபோது, "நீங்க இந்த நாட்டில் பிறந்தவர்கள்... இந்தியா உங்கள் தாய்நாடு.. இந்த நாட்டில் எத்தனையோ இனங்கள் இருக்கின்றன.. அதுபோல் நீங்களும் ஒரு இனம். மதத்தால் வேறுபட்டவர்கள், அவ்வளவுதான், வேறு ஒன்னுமில்லை.

இஸ்லாமியர்கள்
இந்த மாநாடு வேலூர் மண்டித்தெருவில் நடைபெற்றது.. அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இதற்கு தலைமை தாங்கினார்... திமுக பொருளாளர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

கூட்டணி
இதை தொடர்ந்து அழகிரி பேசும்போது,"திமுக, காங்கிரஸ் கூட்டணி பலமாகவே உள்ளது. இந்தக் கூட்டணி உடைந்த கண்ணாடி என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்திருந்தார்.. அதிமுகவில் செல்லூர் ராஜுதான் விஞ்ஞானி என்று பார்த்தால் ஜெயக்குமாரும் விஞ்ஞானியாகத்தான் இருக்கிறார்" என்று தமாஷாக கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமார்
கூட்டணி விரிசல், கூட்டணியில் பிளவு என்று சில தினங்களுக்கு முன்பு பரபரப்பக்கப்பட்டது.. குறிப்பாக துரைமுருகனின் பேச்சுதான் சலசலப்பின் வீரியத்தை கூட்டி விட்டது.. ஆனால் அழகிரி, திமுக தலைவரின் சந்திப்பின்போதே இந்த புரளிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விட்டது. என்றாலும், இந்த மாநாட்டில் துரைமுருகனும்அழகிரியும் மேடையிலேயே கைகுலுக்கிக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது, மிச்சம் மீதியிருந்த அரசல் புரசல்களையும் அடித்து கொண்டு போய்விட்டது!
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications