வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூணே நாள்தான்.. புது தாலியுடன் தூக்கில் தொங்கிய மகாலட்சுமி.. தந்தையின் குடிவெறியால் விபரீதம்.. ஷாக்

கணவனுக்கு தந்தை வயது என்பதால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்

Google Oneindia Tamil News

வேலூர்: குடிக்கு ஆசைப்பட்ட தந்தை, பெற்ற மகள் மகாலட்சுமியை தன்னுடைய நண்பனுக்கே கல்யாணம் செய்து வைத்துள்ளார்.. தந்தை வயது நபரை திருமணம் செய்த மகாலட்சுமியோ, மூன்றே நாளில் மனம் நொறுங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உள்ளாக்கி வருகிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ளது வடுகந்தாங்கல் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் சாந்தகுமார்.. இவரது மனைவி சம்பூர்ணம் 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

சாந்தகுமார் குடும்பம் மிகவும் ஏழ்மையானது.. ஆனால் சாந்தகுமார் மட்டும் தினமும் தண்ணி அடிப்பார்.. இவருக்கு சங்கர் என்ற ஒரு நண்பர் உண்டு. அவர் அதே பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார்.. சங்கருக்கு 45 வயதாகிறது.. ஆனால் கல்யாணம் இன்னும் ஆகவில்லை.. சாந்தகுமாரும், சங்கரும் நெருங்கிய நண்பர்கள்.. ஒன்றாகவே இருப்பார்களாம்.

சாந்தகுமார்

சாந்தகுமார்

சாந்தகுமாருக்கு சங்கர் தினமும் மது வாங்கி தருவாராம்.. இருவரும் ஒன்றாகவே குடிப்பார்கள்.. மேலும் இவரது குடும்பம் வறுமையில் உள்ளதால், சங்கர்தான் அடிக்கடி ஏதாவது உதவிகளை செய்து வந்துள்ளார். இந்த நேரத்தில் சங்கருக்கு 45 வயசு ஆகியும் கல்யாணம் ஆகவில்லையே என்ற கவலை சாந்தகுமாருக்கு வந்தது.. அதனால் தன்னுடைய மகள் மகாலட்சுமியை சங்கருக்கு கல்யாணம் செய்ய முடிவு செய்தார்.

பிடிவாதம்

பிடிவாதம்

இதை கேட்டதும் மகாலட்சுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.. கல்யாணத்தில் விருப்பமில்லை என்றும் சொல்லி உள்ளார்.. ஆனால் சாந்தகுமார்தான் பிடிவாதமாக இந்த கல்யாணத்தை கடந்த ஏப்ரல் 29 -ம் தேதி விரிஞ்சிபுரத்தில் உள்ள கோயிலில் நடத்தி உள்ளார். ஊரடங்கு நேரத்தில் எப்படி இந்த கல்யாணத்தை சாந்தகுமார் செய்தார் என்றே தெரியவில்லை.. யாருக்குமே இப்படி ஒரு கல்யாணம் நடந்தது கடைசிவரை தெரியவே இல்லை.

மணமக்கள்

மணமக்கள்

கல்யாணம் ஆன 3 நாளும் மணமக்களை தன்னுடைய வீட்டிலேயே தங்க வைத்துள்ளார் சாந்தகுமார். அந்த 3 நாளுமே மகாலட்சுமி அழுதபடியே இருந்துள்ளார்.. 3 நாளும் மன உளைச்சலில் தவித்துள்ளார். இறுதியில் மே 1ம் தேதி, வீட்டில் யாரும் இல்லாத நேரம், ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்... வீட்டிற்குள் நுழைந்த சங்கர் மனைவி சடலமாக தொங்குவதை கண்டு அதிரரந்து போலீசுக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து சடலத்தை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வைத்தனர்.

விசாரணை

விசாரணை

பிறகு வழக்கு பதிவு செய்து விசாரித்தும் வருகின்றனர்.. கல்யாணம் ஆகி 3 நாளில் பெண் உயிரிழந்ததால், ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. குடிக்கு ஆசைப்பட்ட தந்தை, பெற்ற மகளை நண்பனுக்கு கல்யாணம் செய்து வைத்ததும், மனம் உடைந்து அந்த பெண் தறகொலை செய்ததும் வேலூர் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. லாக்டவுன் சமயங்களில் இதுபோன்ற குற்ற செயல்களும் அதிகரித்து வருவது தமிழக மக்களை கவலைக்குரியதாக்கி வருகிறது.

English summary
lockdown crime: new married woman commits suicide near vellore, inquiry is going on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X