வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

துரைமுருகன் பேசிக்கொண்டிருந்தபோதே.. திடீரென மைக் ஆப்.. கரண்ட் கட்.. என்னாச்சு?

Google Oneindia Tamil News

வேலூர்: மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அமைச்சர் துரைமுருகன் செய்வதறியாமல் தவித்த வீடியோ வைரலாகி வருகிறது.

10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மின் வெட்டு தலைத்தூக்கியுள்ளது. முதல்முறையாக மின்வெட்டு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் மின்கம்பிகளில் அணில்கள் விளையாடுவதால் அவை பழுதாகி மின் தடை ஏற்படுகிறது என கூறினார். இதற்கு எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். அவரை அவ்வப்போது கிண்டலும் செய்தனர்.

கொசஸ்தலை ஆற்றில் ஆந்திரா கட்டும் புதிய அணை? தமிழகத்திற்கு பாதிப்பு வருமா.. விளக்கும் துரைமுருகன்கொசஸ்தலை ஆற்றில் ஆந்திரா கட்டும் புதிய அணை? தமிழகத்திற்கு பாதிப்பு வருமா.. விளக்கும் துரைமுருகன்

அதிமுக ஆட்சி

அதிமுக ஆட்சி

கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மின் வெட்டே இல்லை. திமுக ஆட்சியில் மீண்டும் தலைதூக்கியது ஏன் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் இது தொடர்பாக விமர்சனங்களையும் முன் வைத்திருந்தனர். எனினும் தமிழகத்தில் மின் வெட்டு இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

சீமான்

சீமான்

ட்விட்டரிலும் நெட்டிசன்கள், சீமான் உள்ளிட்டோர் மின்வெட்டு குறித்து செந்தில் பாலாஜியிடம் புகார்களை கூறியிருந்தனர். இதிலும் செந்தில் பாலாஜிக்கும் சீமானுக்கும் இடையே வார்த்தை மோதலும் ஏற்பட்டது. இந்த நிலையில் வேலூரில் ஒரு நிகழ்ச்சியில் திமுக அமைச்சர் துரைமுருகன் பேசிக் கொண்டிருந்த போதே மின்வெட்டு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 துரைமுருகன்

துரைமுருகன்

வேலூரில் ஒரு நிகழ்ச்சியில் துரைமுருகன் கலந்து கொண்டார். அவர் தான் படித்த பள்ளி குறித்தும் பள்ளி காலத்தில் இருந்த அனுபவம் குறித்தும் மேடையில் பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பேசத் தொடங்கிய போது திடீரென மின் வெட்டு ஏற்பட்டது. அப்போது துரைமுருகன் ஏன் என்னாச்சு என கேட்டார்.

பவர் கட்

பவர் கட்

அப்போது மேடையில் இருந்தவர்கள் கரன்ட் கட் சார் என கூறினர். இதையடுத்து பேச்சை நிறுத்திய துரைமுருகன் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு சென்று அமர்ந்தார். தமிழகத்தில் மின் வெட்டே இல்லை என செந்தில் பாலாஜி கூறியிருந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலேயே பவர் கட் ஏற்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது. அமைச்சர் பேசும் போது அணில் குறுக்கால ஓடிவிட்டது என கலாய்த்து வருகிறார்கள்.

English summary
Power cut happened in Minister Durai Murugan 's vellore function, video goes trending in social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X