Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா தடுப்பூசிகள் 77% பாதுகாப்பானது.. வேலூர் சி.எம்.சியின் ஆய்வில் கிடைத்த ஆச்சர்யமான தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் சி.எம்.சி மருத்துவனை மேற்கொண்ட ஒரு ஆய்வில், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், கொரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியதில்லை. 77 சதவீதம் அதிக பாதுகாப்பை அளிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Recommended Video

    Covaxin vs Covishield vs Sputnik வித்தியாசம் என்ன ? Best Corona vaccine எது?

    எனினும் இரண்டாவது அலைக்கு காரணமான பீட்டா (பி .1.1.7) மற்றும் டெல்டா (பி .1.617.2) வகைகளால் ஏற்படும் நோய் தெர்றறு விகிதத்தை அது ஆராயவில்லை.
    இந்த ஆய்வு முடிவுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டவை அல்ல, அதாவது இறுதியான ஆய்வுவின் முடிவு அல்ல என்று கூறப்பட்டுள்ளது.

    வேலூர் சி.எம்.சி மருத்துவனையின் மாற்று மருத்துவம் துறை பேராசிரியரும், இந்த ஆய்வின் ஆசிரியருமான டாக்டர் ஜாய் ஜே மம்மன் கூறுகையில்.
    "COVID-19 தடுப்பூசிகள் நோய்த்தொற்று மற்றும் நோயின் தீவிரத்தை குறைப்பதில் பெரும் நன்மையைக் கொண்டுள்ளன என்பதை எங்கள் ஆய்வு காட்டுகிறது. தடுப்பூசி ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் தொற்றின் பரிமாற்ற சங்கிலியை உடைக்க உதவுகிறது

    "கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகியவற்றின் செயல்திறனை எங்களால் தனித்தனியாக ஆய்வு செய்ய முடியவில்லை, ஏனெனில் ஒரு சிலர் மட்டுமே கோவாக்சின் பெற்றனர். 93% க்கும் அதிகமானவர்கள் கோவிஷீல்ட்டைப் பெற்றிருந்தாலும், தடுப்பூசி போடப்பட்ட நபர்கள், பாதுகாக்கப்படாத நபர்களுடன் ஒப்பிடும்போது சிறப்பாக பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை ஆய்வு காட்டுகிறது என்றார்.

    தடுப்பூசி எப்படி

    தடுப்பூசி எப்படி

    வேலூர் சி.எம்.சி மருத்துவமனை சார்பில் ஜனவரி 21 முதல் ஏப்ரல் 30 2021 வரை 8991 (84.8%) சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அவர்களில் பெரும்பாலோர் (கிட்டத்தட்ட 8,400) கோவிஷீல்ட் பெற்றனர். பிப்ரவரி 21 முதல் மே 19 வரை நோய்த்தொற்று மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தடுப்பூசி போடப்பட்ட 8,958 நபர்களில் ஒரு மரணம் கூட பதிவாகவில்லை. எனினும் 1,609 சுகாதாரமற்ற சுகாதாரப் பணியாளர்களில் ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது.

    ஆக்சிஜன் தேவை

    ஆக்சிஜன் தேவை

    இரண்டு அளவுகளைப் பெற்ற 7,080 சுகாதாரப் பணியாளர்களில், தடுப்பூசிகள் தொற்றுநோய்க்கு எதிராக 65% பாதுகாப்பையும், மருத்துவமனையில் சேர்ப்பதற்கு எதிராக 77% பாதுகாப்பையும், ஆக்ஸிஜனின் தேவைக்கு எதிராக 92% பாதுகாப்பையும், ஐ.சி.யூ சேர்க்கையில் இருந்து 94% பாதுகாப்பையும் அளித்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்களில், இரண்டாவது டோஸுக்குப் பிறகு சராசரியாக 47 நாட்களுக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    70 சதவீதம் பாதுகாப்பு

    70 சதவீதம் பாதுகாப்பு

    COVID-19 தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட நோய்த்தொற்று மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு எதிராக அதிக பாதுகாப்பை அளிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரே ஒரு டோஸ் மட்டுமே பெற்ற 1,878 சுகாதாரப் பணியாளர்களில், தொற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பு 61% ஆகவும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு எதிரான பாதுகாப்பு 70% ஆகவும் இருந்தது. ஒரு டோஸ் பெற்றவர்கள் ஆக்ஸிஜன் தேவையில் இருந்து 94% பாதுகாப்பு பெற்றுள்ளார்கள். ஐ.சி.யூ பெட் தேவை 95% குறைந்துள்ளது.

    யாருக்கு எவ்வளவு தேவை

    யாருக்கு எவ்வளவு தேவை

    ஒரே ஒரு டோஸ் பெற்ற 1,878 சுகாதாரப் பணியாளர்களில், 200 (10.6%) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 22 (1.2%) பேருக்கு மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுடன் ஒப்பிடுகையில், இரண்டு அளவுகளைப் பெற்ற 7,080 சுகாதாரப் பணியாளர்களில், 679 (9.6%) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 64 (0.9%) பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இரண்டு அளவைப் பெற்றவர்களில், நான்கு பேருக்கு மட்டுமே ஆக்ஸிஜன் சப்போர்ட் தேவைப்பட்டது. இரண்டு பேருக்கு மட்டுமே ஐ.சி.யூ பராமரிப்பு தேவைப்பட்டது

    சுகாதார அமைப்பு

    சுகாதார அமைப்பு

    வேலூர் சி.எம்.சி பணிபுரியும் நுண்ணுயிரியல் பேராசிரியர் டாக்டர் ககன்தீப் காங் இதுபற்றிய ட்வீட் பதிவில் "தடுப்பூசிகள் நன்றாக வேலை செய்கின்றன! நோய்த்தொற்றுக்கு எதிராக நல்லது (பரவும் ஆபத்து உள்ள சுகாதார அமைப்புகளில்), கடுமையான நோய்க்கு எதிரானது "என்று ட்வீட் செய்துள்ளார். அவர் ஆய்வு செய்யவில்லை

    பாதிப்பு அதிகம் யாருக்கு

    பாதிப்பு அதிகம் யாருக்கு

    இந்த ஆய்வை மேற்கொண்ட ஆசிரியர்களின் கூற்றுப்படி, பல சுகாதாரப் பணியாளர்கள் இரண்டாவது டோஸ் எடுக்க முடியாமல் போனதற்கான காரணம் தடுப்பூசி பற்றாக்குறை என்றார்கள். கோவிஷீல்ட்டின் முதல் மற்றும் இரண்டாவது டோஸுக்கு இடையிலான இடைவெளியில் வழிகாட்டுதல்களில் மாற்றங்கள் ஏற்பட்டதையும் சுட்டிக்காடடினார்கள். எந்தவொரு தடுப்பூசியும் பெறாத 1,609 சுகாதாரப் பணியாளர்களில், 438 (27.2%) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 64 (4%) பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். எந்தவொரு தடுப்பூசியையும் பெறாத பதினொரு (0.7%) நபர்களுக்கு ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்பட்டது, எட்டு (0.5%) பேருக்கு ஐ.சி.யூ பராமரிப்பு தேவைப்பட்டது.

    ஆய்வின் தகவல் என்ன

    ஆய்வின் தகவல் என்ன

    தொற்றுநோயிலிருந்து குறைந்த செலவில் பாதுகாப்பு, நோய் தீவிரத்தை குறைத்தல் மற்றும் பரவும் நோய் பரவல் சங்கிலியை திறம்பட உடைப்பது உள்ளிட்டவற்றை தடுப்பூசிகள் சிறப்பாக செய்திருகின்றன. பல மாநிலங்கள் சுகாதார அமைப்புகள் தங்கள் அழுத்தத்தை குறைக்க தடுப்பூசி இயக்கத்தைக் தேர்வுசெய்திருப்பதால், எதிர்கால அலைகளை சிறந்த முறையில் தடுக்கலாம் , தடுப்பூசி மூலம் மோசமான பாதிப்பை தடுக்க முடியும் என்று இந்த ஆய்வில் நாங்கள் உணர்கிறோம், "என்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+