அந்த சிரிப்புதான் சார்.. ஆசையை சொன்ன சிறுவன்! உடனே செய்த போலீஸ் - எல்லோரும் இப்டி இருந்தால்?

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: போலீஸ் தொப்பி அணிந்து பைக்கில் செல்ல வேண்டும் என்ற சிறுவனின் ஆசையை வாணியம்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் நிறைவேற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

காவல்துறை என்றாலே அதன் மீது மக்களின் மத்தியில் இருக்கும் அச்ச உணர்வும் மோசமான மனநிலையும் இன்னும் மாறவில்லை. காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்லி போலீசார் எவ்வளவுதான் விழிப்புணர்வு கொடுத்தாலும் ஆங்காங்கே சில போலீஸ் அதிகாரிகள் செய்யும் தவறுகள் மற்றும் அத்துமீறல்களால் ஒட்டுமொத்த காவல்துறையின் மீதே பழி விழுகிறது.

Vaniyambadi police SI fullfilled the small boys desire - Video got more likes

ஆனால், உண்மையில் எல்லா போலீசாரும் அவ்வாறு இல்லை. பலர் தங்களின் அதிகார வரம்புக்கு உட்பட்டு நெருக்கடியான பணிகளுக்கு மத்தியில் மக்களுக்கு உதவி வருகின்றனர். இதுபோன்றவர்களால்தான் நம்பிக்கையோடு நியாயம் கிடைக்கும் என மக்கள் பலர் காவல் நிலையங்களுக்கு செல்கின்றனர்.

இந்த நிலையில்தான், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரியும் ராஜா, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது தனது தந்தையோடு வந்த சிறுவனிடம் கைகொடுத்து பேசினார். அப்போது அந்த சிறுவன் போலீஸ் தொப்பி அணிந்து பைக்கில் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை அவரிடம் தெரிவித்துள்ளான்.

இதனை உடனே ஏற்றுக்கொண்ட உதவி ஆய்வாளர் ராஜா, சிறுவன் அணிந்திருந்த குல்லாவுக்கு மேல் தனது போலீஸ் தொப்பியை மாட்டி, பைக்கில் தன் முன்பாக அமரவைத்து சல்யூட் அடிக்க சொல்கிறார். அந்த சிறுவனும் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டே சல்யூட் அடிக்க பைக் புறப்பட்டது.

இந்த வீடியோவை செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுனா சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர அது தற்போது வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+