வேலூர் போலி சிங்கம்.. டீக்காராமனை நியாபகம் இருக்கா? 15 கிலோ தங்கம்.. தண்டனை என்ன தெரியுமா?
வேலூர்: வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 2021ம் ஆண்டு நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளி டீக்காராமனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடையின் பின்பக்கம் துளையிட்டு முகமூடி அணிந்து புகுந்த அவர், சுமார் ரூ.15 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்ததுடன், திருடிய நகைகளை அணிந்து ஊரில் சுற்றியதால் போலீசில் பிடிபட்டார். மயானத்தில் புதைத்து வைக்கப்பட்ட நகைகளும் மீட்கப்பட்ட நிலையில், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வேலூர், தோட்டப்பாளையத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை, கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி இரவு, வழக்கம்போல் இரவில் ஊழியர்கள் பூட்டிவிட்டுச் சென்றனர். அடுத்த நாள் காலையில் (டிசம்பர் 15 2021) திறந்து பார்த்தபோது, கடையின் பின்பக்கச் சுவர் துளையிடப்பட்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள், வேலூர் வடக்கு போலீஸாருக்கு உடனடியாகத் தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து துளையைப் பார்வையிட்டு, சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். வேலூர் சரக டி.ஐ.ஜி ஏ.ஜி.பாபு, எஸ்.பி ராஜேஷ்கண்ணன் ஆகியோரும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, விசாரணையைத் தீவிரப்படுத்தினார்கள். போலீசார் அப்போது மோப்ப நாய்கொண்டும் கொள்ளையர்கள் வந்து சென்ற பாதையை ஆய்வு செய்தார்கள்.
நகைக்கடை உள்ளே இருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்த நிலையில், சிங்க முகமுடி மற்றும் தலையில் விக் அணிந்து கொள்ளையன் கேமராக்கள் மீது ஸ்பிரே அடித்துவிட்டு 15 கிலோ நகைகளைத் திருடி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
8 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடிய நிலையில், வேலூர் பள்ளிகொண்டா அருகே உள்ள குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக்கான டீக்காராமன்(24) என்பவரை தனிப்படை போலீசார் கொள்ளை போன அடுத்த ஐந்து நாட்களில் கைது செய்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை வேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் (எண் 4) நீதிமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், இன்று வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படடது. வழக்கை விசாரித்த நீதிபதி ரோஷ்கலா, கைது செய்யப்பட்ட டீக்காராமன் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்த நிலையில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1000 அபராதமும் செலுத்தப்பட வேண்டும் எனவும் அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து இன்று தீர்ப்பளித்தார்.தண்டனை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து டீக்காராமன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications