கணவன், ஒரு வயது மகனை ஏரிக்கரையில் புதைத்த ராணிப்பேட்டை தீபிகா.. வாழ்நாளில் மறக்க முடியாத தண்டனை

Subscribe to Oneindia Tamil

வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததாக கருதி தனது கணவர் மற்றும் ஒரு வயது மகனை திட்டமிட்டு கொலை செய்த குற்றத்திற்காக தீபிகா என்ற பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனையோடு, கூடுதலாக 5 ஆண்டுகள் என மொத்தம் 33 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கள்ளக்காதல் என்பது மிகவும் மோசமானது.. திருமணத்தை மீறிய உறவில் இருப்பவர்கள், தங்கள் இணைக்கு கள்ளக்காதல் தெரியாத வரை அமைதியாக இருப்பார்கள். தெரிந்துவிட்டால் அவர்களை கொலை செய்யவும் தயங்குவது இல்லை. அப்படி கொல்ல முடியாதவர்கள் தங்களை தாங்களே மாய்த்துக் கொள்ளவும் தயங்குவது இல்லை. திருமணத்தை மீறிய உறவை சட்டம் அனுமதிக்காது என்பதை தாண்டி, சமூகமும் அனுமதிக்காது. இந்த சூழலில் தவறான முடிவினை எடுக்கிறார்கள்... அப்படி முடிவெடுத்த ராணிப்பேட்டை பெண்ணுக்கு 33 வருடம் சிறை தண்டனை கிடைத்துள்ளது.

vellore ranipet crime

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடை அடுத்த தாஜ்புரா மந்தவெளி தெருவை சேர்ந்த 25 வயதாகும் தீபிகாவுக்கு ராஜா என்ற கணவர் இருந்தார்.. ராஜா ஆற்காடு பகுதியில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் இருந்தது.

இந்த நிலையில், தீபிகாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதன் காரணமாக, தீபிகா கடந்த 2019ம் ஆண்டு, ஜெயராஜ் உடன் சேர்ந்து தனது கணவர் மற்றும் ஒரு வயது மகனை திட்டமிட்டு கொலை செய்ததுடன், தாஜ்புரா ஏரிக்கரை ஓரமாக புதைத்துள்ளார். இதை கண்டுபிடித்த போலீசார் வழக்கு பதிவு செய்து தீபிகா மற்றும் ஜெயராஜ் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக ராணிப்பேட்டை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சங்கர் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கில் நீதிபதி செல்வம் இன்று தீர்ப்பினை வழங்கினார். வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், ராஜா (28) மற்றும் ஒரு வயது மகனை தீபிகா திட்டமிட்டு கொலை செய்த குற்றத்திற்காக இரட்டை ஆயுள் தண்டனையோடு, கூடுதலாக 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என மொத்தம் 33 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், வழக்கிலிருந்து ஜெயராஜை விடுவித்தார். இதனைத் தொடர்ந்து ஆற்காடு கிராமிய காவல் நிலைய நீதிமன்ற சிறப்பு ஆய்வாளர் வெங்கடேஷ் மற்றும் போலீசார், பலத்த பாதுகாப்புடன் தீபிகாவை வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+