கருப்புப் பணம் கையாடல்... ரூ. 25 லட்சம் கொள்ளை... சென்னை வங்கி ஊழியர்கள் 5 பேர் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருடனுக்கு தேள் கொட்டியது போல என்பார்களே அப்படி ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். அதுமுதல், மக்கள் தங்களிடம் உள்ள செல்லாக்காசுகளை வங்கிகளில் மாற்றி வருகின்றனர். இந்நிலையில், சென்னை அடையார் சாஸ்திரி நகர் 1-வது அவென்யூவில் இயங்கி வரும் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் வங்கி மேலாளர், கமிஷன் பெற்றுக் கொண்டு சட்டவிரோதமாக சிலருக்கு கருப்புப் பணத்தை மாற்றிக் கொடுத்துள்ளார். ஆனால், இது தொடர்பான பண பரிமாற்றத்தில் அவரிடம் இருந்த ரூ. 25 லட்சம் கொள்ளை போனது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் இளங்கோவன் உட்பட 5 பேரைக் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications