ஒருவர் மீது ஒருவர் ‘சாணி’ அடித்து... கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட வினோதத் திருவிழா’ -வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஒருவர் மீது ஒருவர் சாணி எறிந்து கொண்டாடும் வினோதத் திருவிழா கொண்டாடப்பட்டது. இங்குள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்து வரும் நான்காவது நாள் சாணியடி திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் மேலாடை அணியாமல் ஆண்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு சாணியடித்து விளையாடுவதன் மூலம் தீராத நோய்கள் தீர்ந்து, விவசாயம் செழிக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை ஆகும்.












Click it and Unblock the Notifications