For Daily Alerts
Just In
இது தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி... அப்பல்லோ வாசலில் சி.ஆர்.சரஸ்வதி ‘மகிழ்ச்சி’- வீடியோ
இது தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி... ஒன்இந்தியாவிற்கு சி.ஆர்.சரஸ்வதி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி- வீடியோ
சென்னை: கடந்த 59 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, நேற்று மாலை 5.30 மணி அளவில் சாதாரண தனி வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த தகவலை அறிந்ததும் மருத்துவமனை முன்பு காத்திருந்த அதிமுகவினர் மகிழ்ச்சியில் திளைத்தனர். இந்நிலையில், ஜெயலலிதா வார்டு மாற்றப்பட்டது குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஒன் இந்தியாவிற்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர், "முதல்வர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டிருப்பது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. இதனை வார்த்தைகளால் கூற முடியாது. அவர் பூரண உடல் நலம் பெற்று இன்றைய தினம் சாதாரண வார்டுக்கு மாறி இருக்கும் இந்த தருணம் தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி. அம்மா வீடு திரும்பும் நாளுக்காக காத்திருக்கிறோம்" என்றார்.
jayalalitha apollo hospital admk oneindia tamil videos ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவு
English summary
Tamil Nadu Chief Minister J Jayalalithaa has been shifted from the intensive critical care unit (ICCU) to the general ward of the Apollo Hospital in Chennai, and her AIADMK party on Sunday asserted that she would be returning to her Poes Garden residence soon.
Story first published: Sunday, November 20, 2016, 16:14 [IST]