For Daily Alerts
Just In
தென்னை மரங்களை அழித்து மாம்பழ ஜூஸ் கம்பெனி... கரூரில் விவசாயிகள் போராட்டம்- வீடியோ
கரூர்: கரூர் அருகே குளத்துப்பாளையம் என்ற இடத்தில் விவசாய நிலத்தில் மாம்பழக் கூழ் தயாரிக்கும் கம்பெனி ஒன்று தயாராகி வருகிறது. அங்கிருந்த ஐநூறு தென்னை மரங்களை அழித்து இந்த கம்பெனி கட்டப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த கம்பெனி செயல்பாட்டுக்கு வந்தால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் துர்நாற்றம் வீசும் எனவும், விவசாயக் கிணறுகளில் தண்ணீர் வற்றும் எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே இந்தக் கம்பெனிக்கு தடை விதிக்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விரைந்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் மனுவும் அளித்தனர்.
English summary
Near Karur, the farmers staged a protest against mango juice factory.
Story first published: Tuesday, November 8, 2016, 16:30 [IST]