11 மாடிக் கட்டிடத்தை இடித்தது சரி தான்... இனி அச்சமின்றி வாழ்வோம்.. மவுலிவாக்கம் மக்கள் நிம்மதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் ஆபத்தான நிலையில் இருந்த 11மாடிக் கட்டிடம் நேற்று வெடிபொருள்கள் உதவியுடன் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மழைக்கோ, இடிக்கோ எப்போது இடிந்து விழுமோ என இதுநாள் வரை அக்கட்டிடத்தைப் பார்த்து அச்சத்தில் இருந்ததாகவும், இனி நிம்மதியாக வாழலாம் என்றும் அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தற்போது இடிக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் அருகே கட்டப்பட்ட மற்றொரு 11 மாடிக் கட்டிடம் கடந்த 2014ம் ஆண்டு கனமழையின் போது இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், அதன் தரை தளத்தில் தங்கியிருந்த 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது.












Click it and Unblock the Notifications