2 மாணவர்கள் மர்மமரணம்.. திருக்கோவிலூர் உறைவிடப் பள்ளியில் சோகம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த சந்தப்பேட்டையில் உள்ளது அன்னை தெரசா உண்டு உறைவிடப்பள்ளி. இங்கு கடந்த ஞாயிறன்று அய்யனார்(8) என்ற 3ம் வகுப்பு மாணவனும், ராஜதுரை (11) என்ற 6ம் வகுப்பு மாணவனும் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து கோட்டாட்சியர் செந்தாமரை, டிஎஸ்பி கீதா, தாசில்தார் பாண்டியன், அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் மூர்த்தி மற்றும் கல்வித்துறை, சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விடுதிக்குச் சென்று மாணவர்கள் இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications