புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட்ட பணி நீக்க ஊழியர்கள்.. தீக்குளிக்க முயற்சித்ததால் தடியடி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: சட்டசபைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து புதுச்சேரி பொதுப்பணித்துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட 2,612 பேரை பணி நீக்கம் செய்யப்பட்டனர். பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த ஊழியர்கள் தங்களை மீண்டும் பணியில் சேர்க்க கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், இன்று புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது திடீரென போராட்டக்காரர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். விரைந்து வந்த போலீசார் அவரது முயற்சியை முறியடித்தனர். இதனால் கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவங்களால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
வீடியோ:












Click it and Unblock the Notifications