நெகிழ வைத்த பாஜகவினர்! மயிலத்தில் பிரதமரின் தாய்க்கும், நடிகர் மாரிமுத்துவுக்கும் சிலை! ஏன் தெரியுமா
விழுப்புரம்: பிரதமர் நரேந்திர மோடியின் மறைந்த தாயாரான ஹீராபென் மோடி மற்றும் ‛எதிர்நீச்சல்' தொடர் மூலம் பிரபலமான மறைந்த நடிகர் மாரிமுத்து ஆகியோருக்கு விழுப்புரம் அருகே பாஜக தொண்டர்கள் சிலை திறந்து நெகிழ வைத்துள்ளனர். மேலும் சிலை திறப்பின் பின்னணி குறித்தும் விவரித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் மோடி. இவர் குஜராத் மாநிலம் காந்திநகரில் வசித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு 100 வயதை எட்டினார். பிரதமர் மோடி அவ்வப்போது டெல்லியில் இருந்து குஜராத் சென்று தாயை சந்தித்து வந்தார்.

இந்நிலையில் தான் வயது முதிர்வு காரணமாக உடலம் நலம் பாதிக்கப்பட்ட ஹீராபென் மோடி கடந்த ஆண்டு இறுதியில் காலமானார். இதையடுத்து அவரது உடலுக்கு பிரதமர் மோடி இறுதி சடங்குகள் செய்த பிறகு தகனம் செய்யப்பட்டது.
அதேபோல் சன்டிவியில் வெளியாகும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் மாரிமுத்து. தேனி மாவட்டத்தை சேர்ந்த இவர் இயக்குனராகவும், நடிகராவும் இருந்தார். அதன்பிறகு சீரியலில் நடிக்க தொடங்கினார். எதிர்நீச்சல் சீரியலில் அவர் ஏற்று நடித்த ஆதிகுணசேகரன் கதாபாத்திரம் வயது பாகுபாடு இன்றி அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் தான் 2 மாதங்களுக்கு முன்பு காலை வேளையில் சென்னையில் 'எதிர்நீச்சல்' சீரியலுக்காக டப்பிங் பேசியபோது மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் மோடி மற்றும் நடிகர் மாரிமுத்துவுக்கு பாஜக தொண்டர்கள் சிலர் சிலை வடித்துள்ளனர். ஹீரா பென் மோடி இருக்கையில் அமர்ந்து இருப்பது போலவும், நடிகர் மாரிமுத்து நிற்பது போன்றும் சிலை உருவாக்கப்பட்டது.
இந்த சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க திறக்கப்பட்டது. திரைப்பட சண்டை பயிற்சியாளரான ஜாகுவார் தங்கம் இந்த சிலைகளை திறந்து வைத்தார். இந்த சிலை திறப்பு பற்றி பாஜக தொண்டர் ஒருவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி தாயாரின் சிலை மயிலம் தருதாழி கோவிலில் நிறுவப்பட்டது. இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது ஏன் என்று கேட்டால் நாடு போற்றும் நல்ல பிரதமராக மோடி இருக்கிறார்.
அவரை பெற்றெடுத்த தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை போற்ற வேண்டும், வழிபாடு செய்ய வேண்டும் என்பதற்காக தான் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் போற்றக்கூடிய வகையில் இருக்கும் ஒரே தலைவர் பிரதமர் மோடி மட்டுமே. இதனால் அவரது தாயாரின் சிலையை எமகண்டேஸ்வரர் கோவிலில் திறந்து வைத்துள்ளோம். ஜாகுவார் தங்கம் தலைமையில் சிலை திறக்கப்பட்டுள்ளது'' என்றார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications