பட்டாசு ஆலை வெடி விபத்து.. பெண் உட்பட இருவர் பலி.. 4 பேர் படுகாயம்.. சாத்தூரில் சோகம்!

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கணிஞ்சம்பட்டி கிராமத்தில் கந்தசாமி என்பவர் பட்டாசு ஆலை ஒன்றை நடத்தி வந்தார். இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் இன்று திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கிய பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து காரணமாக பட்டாசு ஆலையில் பணியாற்றிய 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். குறிப்பாக வெடிவிபத்தில் படுகாயமடைந்த மாரீஸ்வரன், கருப்பசாமி, மாரிமுத்து, ராஜ்குமார் ஆகியோருக்கு 100 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

A woman was killed in an explosion at a private firecracker factory in Virudhunagar

இந்த வெடி விபத்து காரணமாக ஆலையின் 8 அறைகள் வெடித்து தரைமட்டமாகியுள்ளன. இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தை தொடர்ந்து, தீயணைப்புத்துறையினர் 2 வாகனங்களில் வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அதேபோல் சிவகாசி அருகே தாயில்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். இந்த வெடி விபத்தில் ஆலையில் இருந்த இரு அறைகளும் தரைமட்டமாகியுள்ளன. ஒரே நாளில் விருதுநகர் மாவட்டத்தின் இரு பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+