விட மாட்டேன்! ஆளுநரை வைத்து டெல்லி போட்ட "டபுள் பிளான்".. மேடையிலேயே புட்டு புட்டு வைத்த ஸ்டாலின்
விருதுநகர்: திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆளுநர் பதவியை கடுமையாக விமர்சித்து பேசினார். ஆளுநர்களை நேரடியாக அட்டாக் செய்து முதல்வர் விமர்சனம் வைத்து இருந்தார்.
விருதுநகர் மாவட்டம் பட்டம் புதூரில் நேற்று திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு நபர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டம் போல இந்த கூட்டம் நடைபெற்றது. 2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40க்கு 40 இடங்களையும் வெல்ல வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் இந்த கூட்டத்தில் பேசினார்.

ஸ்டாலின் பேச்சு
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், விருதுநகர் மாவட்டம் திமுகவின் கோட்டை. தமிழ்நாட்டை எல்லா வளமும் கொண்ட மாநிலமாக மாற்றி வருகிறோம். சுயமரியாதை இயக்கத்தின் கோட்டை விருதுநகர். இந்த கூட்டத்தை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்து உள்ளனர். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் ஆகியோருக்கு பாராட்டுகள் ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக அறிவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

திராவிட மாடல்
திராவிட மாடல் கொள்கையோடு நாம் ஆட்சி செய்து வருகிறோம். இந்த மாநிலத்திற்கு மட்டுமல்ல, மொத்த தேசத்திற்கும் நாம் ஆற்ற வேண்டிய கடமை மீதம் இருக்கிறது. கூட்டாச்சியை, மாநில சுயாட்சியை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, மொழி உரிமையை, சமூக நீதியை இந்தியா முழுமைக்கும் நாம் கொண்டு செல்ல வேண்டும். மாநிலங்கள் வலிமையாக இருக்க வேண்டும். மாநிலங்கள் வலிமையாக இருப்பதுதான் கூட்டாச்சிக்கு அடிப்படை.

தன்னிறைவு
தமிழ்நாடு மட்டுமல்ல எல்லா மாநிலங்களும் தன்னிறைவு பெற்று இருக்க வேண்டும். இந்தியாவின் எல்லா மாநிலங்களும் வலிமையாக, வளமாக இருக்க வேண்டும். நாம் வலிமையாக, வளமாக இருப்பதால்தான் மக்களுக்கு நன்மைகளை செய்ய முடிகிறது. மக்களுக்கு நலத்திட்டங்களை கொண்டு செல்ல முடிகிறது. ஒற்றை மொழியான இந்தியை திணிப்பதிலும், ஒற்றை திட்டங்களை கொண்டு வருவதிலும் ஒன்றிய அரசு முனைப்பு காட்டுகிறது.

மாநில உரிமை
இது மாநில உரிமைகளை பாதிக்கும். ஜிஎஸ்டி, நீட், புதிய கல்விக்கொள்கை எல்லாம் மாநில உரிமைகளை பறிக்கும் விதமாக உள்ளது. ஒன்றிய அரசின் மூலமாக மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வர பார்க்கிறார்கள். ஆளுநர்கள் மூலமாக இரட்டை ஆட்சி நடத்த பார்க்கிறார்கள். இரண்டு ஆட்சி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு அனுமதிக்க மாட்டோம். இவற்றை தடுக்க திமுக கூட்டணி வலிமையாக போராடும். இவற்றை தடுக்க, தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து 40 உறுப்பினர்கள் தேர்வாக வேண்டும். 40க்கு 40 என்ற வெற்றியை நாம் அடைந்தாக வேண்டும், என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
-
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி! -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக












Click it and Unblock the Notifications