விட மாட்டேன்! ஆளுநரை வைத்து டெல்லி போட்ட "டபுள் பிளான்".. மேடையிலேயே புட்டு புட்டு வைத்த ஸ்டாலின்
விருதுநகர்: திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆளுநர் பதவியை கடுமையாக விமர்சித்து பேசினார். ஆளுநர்களை நேரடியாக அட்டாக் செய்து முதல்வர் விமர்சனம் வைத்து இருந்தார்.
விருதுநகர் மாவட்டம் பட்டம் புதூரில் நேற்று திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு நபர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டம் போல இந்த கூட்டம் நடைபெற்றது. 2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40க்கு 40 இடங்களையும் வெல்ல வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் இந்த கூட்டத்தில் பேசினார்.

ஸ்டாலின் பேச்சு
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், விருதுநகர் மாவட்டம் திமுகவின் கோட்டை. தமிழ்நாட்டை எல்லா வளமும் கொண்ட மாநிலமாக மாற்றி வருகிறோம். சுயமரியாதை இயக்கத்தின் கோட்டை விருதுநகர். இந்த கூட்டத்தை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்து உள்ளனர். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் ஆகியோருக்கு பாராட்டுகள் ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக அறிவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

திராவிட மாடல்
திராவிட மாடல் கொள்கையோடு நாம் ஆட்சி செய்து வருகிறோம். இந்த மாநிலத்திற்கு மட்டுமல்ல, மொத்த தேசத்திற்கும் நாம் ஆற்ற வேண்டிய கடமை மீதம் இருக்கிறது. கூட்டாச்சியை, மாநில சுயாட்சியை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, மொழி உரிமையை, சமூக நீதியை இந்தியா முழுமைக்கும் நாம் கொண்டு செல்ல வேண்டும். மாநிலங்கள் வலிமையாக இருக்க வேண்டும். மாநிலங்கள் வலிமையாக இருப்பதுதான் கூட்டாச்சிக்கு அடிப்படை.

தன்னிறைவு
தமிழ்நாடு மட்டுமல்ல எல்லா மாநிலங்களும் தன்னிறைவு பெற்று இருக்க வேண்டும். இந்தியாவின் எல்லா மாநிலங்களும் வலிமையாக, வளமாக இருக்க வேண்டும். நாம் வலிமையாக, வளமாக இருப்பதால்தான் மக்களுக்கு நன்மைகளை செய்ய முடிகிறது. மக்களுக்கு நலத்திட்டங்களை கொண்டு செல்ல முடிகிறது. ஒற்றை மொழியான இந்தியை திணிப்பதிலும், ஒற்றை திட்டங்களை கொண்டு வருவதிலும் ஒன்றிய அரசு முனைப்பு காட்டுகிறது.

மாநில உரிமை
இது மாநில உரிமைகளை பாதிக்கும். ஜிஎஸ்டி, நீட், புதிய கல்விக்கொள்கை எல்லாம் மாநில உரிமைகளை பறிக்கும் விதமாக உள்ளது. ஒன்றிய அரசின் மூலமாக மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வர பார்க்கிறார்கள். ஆளுநர்கள் மூலமாக இரட்டை ஆட்சி நடத்த பார்க்கிறார்கள். இரண்டு ஆட்சி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு அனுமதிக்க மாட்டோம். இவற்றை தடுக்க திமுக கூட்டணி வலிமையாக போராடும். இவற்றை தடுக்க, தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து 40 உறுப்பினர்கள் தேர்வாக வேண்டும். 40க்கு 40 என்ற வெற்றியை நாம் அடைந்தாக வேண்டும், என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
-
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்!











Click it and Unblock the Notifications