மோடி சர்வ வல்லமையோடு இருக்கிறார்... திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல - அமைச்சர் ராமச்சந்திரன்
விருதுநகர்: மோடி சர்வ வல்லமையோடு இருப்பதாக சாத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12 வது மாநில மாநாட்டில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனியார் திருமண மஹாலில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில மாநாடு மூன்று தினங்களாக நடைபெற்று வருகிறது.
இன்று தொடங்கிய மாநில மாநாட்டில் கருத்தரங்கம், சொற்பொழிவு, புத்தககண்காட்சி, போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள்
இம்மாநாட்டில் வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், விருதுநகர் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைவர் முத்தரசன், தமிழ்நாடு சிறுபான்மையினர் வாரியத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A.R.ரகுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புத்தக கண்காட்சி
இந்த மாநாட்டு வளாகத்தில் மறைந்த கலைஞர்களின் புகைப்பட திறப்பு நிகழ்ச்சியும், வளாகத்தில் பல்வேறு வகையான புத்தகங்களின் கண்காட்சியும், நாணய கண்காட்சியும், ஓவியக் கண்காட்சியும் நடைபெற்றது. மேலும் இந்த மாநாடு விழாவில் குழந்தைகளின் சிலம்பாட்டம், பறை இசை கலைஞர்களின் பறையாட்டம், போன்றவைகள் நடைபெற்றன.

அமைச்சர் பேச்சு
பின்னர் இந்த மாநில மாநாட்டில் பேசிய தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், "பிரதமராக யார் வரக்கூடாது என்பதில் நாம் அனைவரும் இணைந்து இருந்தால்தான் மோடியை வீழ்த்த முடியும். மோடி சர்வ வல்லமையோடு இருக்கிறார். தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு என்று ஒரு கொள்கை உண்டு. ஆனால் பாஜகவுக்கு கொள்கை எதுவும் கிடையாது அவர்களின் ஒரே கொள்கை இந்த நாட்டை பிரித்தாள்வது மட்டுமே.

மு.க.ஸ்டாலின்
ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அப்படி கிடையாது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான். திமுக இந்துக்களுக்கு எதிரானது அல்ல. தமிழகத்தில் எல்லா வகையிலும் நல்ல ஆட்சி செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எங்களுடைய ஆட்சியில் எல்லா கூட்டணி கட்சிகளையும், ஆதரிக்கிறோம். அவர்களுடன் இணைந்து செயல்படுகிறோம்." என்றார்.
-
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
குறிவைத்து அடித்த எடப்பாடி பழனிசாமி.. வீழ்த்தப்பட்ட ஜெயக்குமார்.. அதிமுக 2021 தேர்தல் பிளாஷ்பேக் -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ்












Click it and Unblock the Notifications