யூ டியூப் சேனல் பின்னணியில் அரசியல் சதி...ராஜேந்திர பாலாஜி சந்தேகம்!!
விருதுநகர்: மக்களை பிரிக்கும் செயலில் யூ டியூப் சேனல் ஈடுபட்டுள்ளது. இந்த சேனலின் பின்னணியில் அரசியல் கட்சிகள் இருக்கின்றன என்று அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தின் அதிமுக பொறுப்பாளராக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நியமிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து இன்று அவர் விருதுநகருக்கு வந்தார். கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''மக்களை பிரிக்கும் நோக்கத்தில் கந்தசஷ்டி பற்றி ஆட்சேபகரமான கருத்தை யூடியூப் சேனல் பதிவு செய்துள்ளது. மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்கும் வேலையில் இந்த சேனல் ஈடுபட்டுள்ளது. இதற்கு பின்னால் பெரிய அரசியல் சதி இருக்கும் என்று நம்புகிறேன். அந்த அரசியல் சதியை தமிழக அரசு ஒடுக்கும்'' என்றார்.
தன் நம்பிக்கைகளை.. பிறர் மேல் திணிக்காமல்.. காயப்படுத்தாமல்.. கமல் "பளிச்" அறிக்கை!
மேலும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால், சிறப்பாக செயல்பட்டு வரும் அதிமுக அரசு மீது தினமும் ஒரு பொய் செய்தியை ஸ்டாலின் கூறி வருகிறார்.
விருதுநகர் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்குத்தான் கொரோனா பாதிப்பு உள்ளது. கொரோனா வந்ததில் இருந்து ஆவின் பால் எந்தவித தட்டுப்பாடும் இல்லாமல் மக்களுக்கு கிடைத்து வருகிறது'' என்றார்.