துபாயில் இருந்து பறந்து வந்த தேவா! காத்திருந்தவருக்கு காதலி கொடுத்த ஷாக்! தீபாவளி அதுவுமா இப்படியா?

Subscribe to Oneindia Tamil

விருதுநகர் : காதலியை பார்ப்பதற்காக ஆசை ஆசையாய் துபாயில் இருந்து வந்தவரை காதலி பார்க்க மறுத்ததோடு தன்னை மறந்து விடுமாறு கூறியதால் அதிர்ச்சியில் அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காதல் விவகாரங்களில் சிக்கி தங்கள் வாழ்க்கையை தொலைக்கும் இளைஞர்கள் தங்களது பெற்றோரின் எதிர்காலம் குறித்தோ தங்களது குடும்பத்தினரின் நிலை குறித்தோ சற்றும் சிந்தித்துப் பார்ப்பது இல்லை. காதல் தோல்வியால் விபரீத முடிவு அல்லது ஒரு தலை காதலால் கொலைவரை செல்லும் பெண்களோ இளைஞர்களோ அதனால் தங்கள் குடும்பம் சந்திக்க போகும் இன்னல்கள் குறித்து யோசிப்பதே கிடையாது

காதல் போனாலும் மீண்டும் ஒரு வாழ்க்கை உள்ளது. தங்களை நம்பி பெற்றோர் உறவினர் என ஒரு சமுதாயம் இருக்கிறது நினைத்துப் பார்த்தால் கொலை தற்கொலை போன்ற விபரீத முடிவுகளுக்குச் செல்ல மாட்டார்கள் அப்படி தங்களது குடும்பத்தை நினைத்துப் பார்க்காத ஒரு இளைஞர் காதலிக்காக எடுத்த விபரீத முடிவால் ஏற்பட்ட சோக சம்பவம் குறித்து பார்க்கலாம்

துபாய் இளைஞர்

துபாய் இளைஞர்

விருதுநகர் மாவட்டம் டி.காமராஜர்புரம் கிராமத்தில் வசித்து வருபவர் கோவில் பிச்சை. விவசாயி. இவரது மகன் தேவகுமார் (24) துபாயில் ஏசி மெக்கானிக்காக கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் தேவகுமாருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய முடிவெடுத்து பெண் பார்த்து வந்துள்ளனர்.

காதலி மறுப்பு

காதலி மறுப்பு

இதனை அறிந்த தேவகுமார் தனது பெற்றோரிடம் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்த தேவகுமார் காதலியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அந்த பெண் அவரது காதலை ஏற்க மறுத்து, தன்னுடன் பேசுவதை கைவிடுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

தீக்குளித்து தற்கொலை

தீக்குளித்து தற்கொலை

இதனால் தேவகுமார் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில கடந்த வியாழக்கிழமை அன்று காதலி பேச மறுத்ததால் விரக்தியடைந்த தேவகுமார் காதலியின் வீட்டின் முன் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்து உள்ளார். இதில் பலத்த தீக்காயம் அடைந்தார் தேவா.

பெரும் அதிர்ச்சி

பெரும் அதிர்ச்சி

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தேவகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தந்தை கோவில் பிச்சை அளித்த புகாரின் அடிப்படையில் வாச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+