Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி.. கண்டுபிடித்தது அமெரிக்கா.. இன்று முதல் பரிசோதனை!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: புதிய கொரோனா வைரஸிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக தடுப்பூசியை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது. இதை மதிப்பீடு செய்து மருத்துவ சோதனை செய்யும் பணி அமெரிக்காவில் இன்று (திங்கள்கிழமை) தொடங்கும் என அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Recommended Video

    கொரோனாவுக்கு தடுப்பூசி.... அமெரிக்கா இன்று பரிசோதனை

    கோவிட் -19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்படுவது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் அதை தடுக்க தடுப்பூசியை உருவாக்கும் பணியில் உலகெங்கிலும் உள்ள டஜன் கணக்கான ஆராய்ச்சி குழுக்கள் போட்டி போட்டு செய்து வருகின்றன.

    முக்கியமாக, அவர்கள் பல்வேறு வகையான தடுப்பூசிகளைப் பின்பற்றி புதிய தொழில்நுட்பங்களிலிருந்து உருவாக்கி வருகிறார்கள். தற்போது உள்ள பாரம்பரிய தடுப்பூசிகளைக் காட்டிலும் விரைவாக உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல் அதிக சக்திவாய்ந்தவை என்பதை நிரூபிப்பதற்காக அவர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    2 ஆண்டுகள் வரை

    2 ஆண்டுகள் வரை

    சில ஆராய்ச்சியாளர்கள் தற்காலிக தடுப்பூசிகளைக் கூட நோக்கமாகக் கொண்டுள்ளனர், அதாவது ஒரு மாதத்திற்கு அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மக்களின் ஆரோக்கியத்தைக் காக்கும் வகையில் அந்த தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் எல்லாமே பரிசோதனை அளவில் தான் உள்ளது. இன்னமும் முழுமையாக வருவதற்கு இரண்டு ஆண்டுகள் வரை ஆகும் என தெரிகிறது.

    வயதானவர்களுக்கு அதிகம்

    வயதானவர்களுக்கு அதிகம்

    தற்போதைய நிலையில் பெரும்பாலான மக்களுக்கு, புதிய கொரோனா வைரஸ் காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற லேசான அல்லது மிதமான அறிகுறிகளை மட்டுமே ஏற்படுத்துகிறது. சிலருக்கு, குறிப்பாக வயதானவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு மட்டுமே இது நிமோனியா உள்ளிட்ட கடுமையான நோய்களை ஏற்படுத்துகிறது. அதனால் தான் வயதானவர்கள், மற்றும் உடலில் பிரச்சனை உள்ளவர்கள் உயிரிழக்கிறார்கள்.

    இன்று பரிசோதனை

    இன்று பரிசோதனை

    இந்நிலையில் புதிய கொரோனா வைரஸிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக தடுப்பூசியை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது. இதை மதிப்பீடு செய்து மருத்துவ சோதனை செய்யும் பணி அமெரிக்காவில் இன்று (திங்கள்கிழமை) தொடங்கும் என அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இன்று பரிசோதனை

    இன்று பரிசோதனை

    சோதனையின் பங்கேற்கும் முதல் பங்கேற்பாளருக்கு இன்று பரிசோதனை தடுப்பூசி போடப்பட உள்ளது. எனினும் இது இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. சியாட்டிலிலுள்ள கைசர் நிரந்தர வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்று வரும் இந்த சோதனைக்கு அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்கள் நிதியுதவி செய்கின்றன. எந்தவொரு தடுப்பூசியையும் முழுமையாக சரிபார்க்க ஒரு வருடம் முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்று பொது சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

    பக்க விளைவுகள் வராது

    பக்க விளைவுகள் வராது

    என்ஐஎச் மற்றும் மாடர்னா இன்க் இணைந்து 45 இளம், ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கு முதன் முதலில் சோதனை தொடங்க உள்ளது. இந்த சோதனையில் பங்கேற்பவர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை, ஏனெனில் அவை வைரஸைக் கொண்டிருக்கவில்லை. தடுப்பூசிகள் எந்த கவலையான பக்க விளைவுகளையும் காட்டாது என்பதை சரிபார்ப்பதை இலக்காக கொண்டு சோதிக்கப்பட இது பெரிய சோதனைகளுக்கு களம் அமைய உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+