'மோசமான ஓடுதளம்' சூடானில் கடும் சவாலுக்கு மத்தியில் துணிச்சலாக செயல்பட்ட இந்திய விமானப்படை.. சபாஷ்!
வாஷிங்டன்: சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் மத்திய அரசு மீட்டு வருகிறது. சூடானில் இரவு நேரத்தில் தரையிறங்குவதற்கு போதிய வசதிகள் இல்லாத விமான நிலையத்தில் துணிச்சலாக இறங்கிய இந்திய விமானப்படை, இந்தியர்கள் 121 பேரை பத்திரமாக மீட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே ஆயுத சண்டை நடைபெற்று வருகிறது. அதிகாரத்தை கைப்பற்ற நடக்கும் மோதலால் அப்பாவி பொதுமக்களும் உயிர் பலி ஆகின்றனர். இதுவரை 400- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அந்ந நாட்டில் வசித்து வரும் வெளிநாட்டு குடிமக்கள் வெளியேறி வருகின்றனர். அவர்களை சம்பந்தபட்ட நாடுகள் மீட்டு வருகின்றன. அந்த வகையில் சூடானில் வசித்து வரும் இந்தியர்களை மீட்க மத்திய அரசும் ஆபரேஷ காவேரி என்ற பெயரில் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த மீட்பு பணி 24 ஆம் தேதி தொடங்கியது.
விமானப்படை விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே தலைநகர் கார்டூம் நகரில் தீவிரமாக சண்டை நடைபெற்று வருகிறது. எனவே அங்கிருந்து பேருந்துகள் மூலமாக இந்தியர்கள் மீட்கப்பட்டு சூடான் துறைமுகத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
பின்னர் விமானபப்டை விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மூலமாக ஜெட்டா அழைத்து வரப்பட்டு சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதுவரை சூடானில் சிக்கியிருந்த 2,400 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே மீட்பு பணியில் மிகவும் சவாலான பணியை இந்திய விமானப்படை மேற்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதாவது, வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள வாடி சய்யித்னா விமான நிலையத்தில் இந்திய விமானப்படையின் C-130J விமானம் தரையிறங்கியுள்ளது. விமானம் தரையிறங்குவதற்கான எந்த வசதிகளும் இந்த விமான நிலையத்தில் இல்லாமல் இருந்துள்ளது. விளக்குகள் எதுவும் இன்றி இருளில் மூழ்கியிருந்ததோடு எரிபொருள் நிரப்பவும் வசதி இல்லாத இந்த விமான நிலையத்தில் இரவு நேரத்தில் பயன்படுத்தப்படும் நைட் விஷன் கண்ணாடிகளை கொண்டு விமானப்படை விமானத்தை விமானி தரையிறக்கி உள்ளார்.

விமானம் தரையிறங்கியதும் ஒரு நொடி கூட தாமதிக்காமல் விமானப்படை வீரர்கள் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் விறு விறுவென ஏற்றியுள்ளனர். பயணிகளில் ஒரு கர்ப்பிணி பெண்ணும் அடங்குவார். அவரையும் பத்திரமாக விமானத்தில் ஏற்றியிருக்கின்றனர்.
விமானத்தின் என்ஜினை ஆஃப் செய்யாமல் ரன்னிங்கில் வைத்திருந்த விமான பயணிகள் மீட்கப்பட்டதும் நைட் விஷன் கண்ணாடிகளை பயன்படுத்தியே டேக் ஆஃப் செய்து இருக்கிறார். வாடி சய்யித்னா முதல் ஜெட்டா வரையிலான இந்த இரண்டை மணி நேர ஆபரேஷன் விமானப்படையின் துணிச்சலையும் சாதனையையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்து இருக்கிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications