Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'மோசமான ஓடுதளம்' சூடானில் கடும் சவாலுக்கு மத்தியில் துணிச்சலாக செயல்பட்ட இந்திய விமானப்படை.. சபாஷ்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் மத்திய அரசு மீட்டு வருகிறது. சூடானில் இரவு நேரத்தில் தரையிறங்குவதற்கு போதிய வசதிகள் இல்லாத விமான நிலையத்தில் துணிச்சலாக இறங்கிய இந்திய விமானப்படை, இந்தியர்கள் 121 பேரை பத்திரமாக மீட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே ஆயுத சண்டை நடைபெற்று வருகிறது. அதிகாரத்தை கைப்பற்ற நடக்கும் மோதலால் அப்பாவி பொதுமக்களும் உயிர் பலி ஆகின்றனர். இதுவரை 400- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

Daring operation in Sudan; IAF aircraft rescued 121 people from a small airstrip in darkness

சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அந்ந நாட்டில் வசித்து வரும் வெளிநாட்டு குடிமக்கள் வெளியேறி வருகின்றனர். அவர்களை சம்பந்தபட்ட நாடுகள் மீட்டு வருகின்றன. அந்த வகையில் சூடானில் வசித்து வரும் இந்தியர்களை மீட்க மத்திய அரசும் ஆபரேஷ காவேரி என்ற பெயரில் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த மீட்பு பணி 24 ஆம் தேதி தொடங்கியது.

விமானப்படை விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே தலைநகர் கார்டூம் நகரில் தீவிரமாக சண்டை நடைபெற்று வருகிறது. எனவே அங்கிருந்து பேருந்துகள் மூலமாக இந்தியர்கள் மீட்கப்பட்டு சூடான் துறைமுகத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

பின்னர் விமானபப்டை விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மூலமாக ஜெட்டா அழைத்து வரப்பட்டு சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதுவரை சூடானில் சிக்கியிருந்த 2,400 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே மீட்பு பணியில் மிகவும் சவாலான பணியை இந்திய விமானப்படை மேற்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதாவது, வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள வாடி சய்யித்னா விமான நிலையத்தில் இந்திய விமானப்படையின் C-130J விமானம் தரையிறங்கியுள்ளது. விமானம் தரையிறங்குவதற்கான எந்த வசதிகளும் இந்த விமான நிலையத்தில் இல்லாமல் இருந்துள்ளது. விளக்குகள் எதுவும் இன்றி இருளில் மூழ்கியிருந்ததோடு எரிபொருள் நிரப்பவும் வசதி இல்லாத இந்த விமான நிலையத்தில் இரவு நேரத்தில் பயன்படுத்தப்படும் நைட் விஷன் கண்ணாடிகளை கொண்டு விமானப்படை விமானத்தை விமானி தரையிறக்கி உள்ளார்.

Daring operation in Sudan; IAF aircraft rescued 121 people from a small airstrip in darkness

விமானம் தரையிறங்கியதும் ஒரு நொடி கூட தாமதிக்காமல் விமானப்படை வீரர்கள் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் விறு விறுவென ஏற்றியுள்ளனர். பயணிகளில் ஒரு கர்ப்பிணி பெண்ணும் அடங்குவார். அவரையும் பத்திரமாக விமானத்தில் ஏற்றியிருக்கின்றனர்.

விமானத்தின் என்ஜினை ஆஃப் செய்யாமல் ரன்னிங்கில் வைத்திருந்த விமான பயணிகள் மீட்கப்பட்டதும் நைட் விஷன் கண்ணாடிகளை பயன்படுத்தியே டேக் ஆஃப் செய்து இருக்கிறார். வாடி சய்யித்னா முதல் ஜெட்டா வரையிலான இந்த இரண்டை மணி நேர ஆபரேஷன் விமானப்படையின் துணிச்சலையும் சாதனையையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்து இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+