அமெரிக்கா அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஜோ பிடன் அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஜோ பிடன் (ஜோ பைடன்) அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெற உள்ளது. குடியரசு கட்சியின் டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் ஜோ பிடன், அதிபர் தேர்தல் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு தமக்கு வாழ்நாள் கவுரம் என நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார் ஜோ பிடன்.
குடியரசுக் கட்சியின் மாநாட்டில் விரைவில் டிரம்ப் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார். ஏற்கனவே ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய தமிழ் வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸை ஜோபிடன் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி உள்ளிட்ட 6 விமான நிலையங்கள் தனியார்மயம்? மத்திய அமைச்சரவையில் இன்று முடிவு