நிதி உதவி அளித்து இந்திய தேர்தலில் தலையிட முயற்சியா? ஜோ பைடன் அரசு மீது டிரம்ப் பகீர் குற்றச்சாட்டு
வாஷிங்டன்: இந்தியாவில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்க வழங்கப்பட்டு வந்த 20 மில்லியன் டாலர் நிதியுதவி நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து பேசிய டிரம்ப், நிதி உதவி மூலம் இந்திய தேர்தலில் தலையிட ஜோ பைடன் நிர்வாகம் முயற்சித்து இருக்கலாம் என யூகிக்கிறேன் எனப் பேசியிருக்கிறார். டிரம்பின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் இந்தியாவில் தேர்தலில் தலையிட முயன்றதாக சூசகமாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளர். அரசின் செயல் திறன் துறை (DOGE) இந்தியாவுக்கு அளித்து வந்த 21 மில்லியன் நிதியை நிறுத்த உத்தரவிட்டுள்ளதை நியாயப்படுத்தி பேசிய டிரம்ப் இவ்வாறு பேசினார்.

மியாமி மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிரம்ப் கூறியதாவது:- இந்தியாவில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்க நாம் ஏன் 21 மில்லியன் கொடுக்க வேண்டும். வேறு யாரோ தேர்வு ஆக வேண்டும் என்று ஜோ பைடன் நிர்வாகம் முயற்சித்து இருக்கலாம் என யூகிக்கிறேன். இந்திய அரசிடம் நாம் இதை சொல்ல வேண்டும்" என்றார்.
முன்னதாக, அமெரிக்க அரசின் செயல்திறன் துறை என்கிற புதிய உருவாக்கிய டிரம்ப் அதன் தலைவராக எலான் மஸ்கை நியமித்தார். அரசு நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் வீண் செலவினங்களை கட்டுப்படுத்துதல் ஆகியவை புதிய துறையின் பணியாகும்.
அதன்படி எலான் மஸ்க் தலைமையிலான அந்த புதிய துறை செலவினங்களை குறைப்பதாக கூறி பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவிகளை நிறுத்தி வந்தது.. அந்த வகையில் இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டு வந்த 21 மில்லியன் டாலர் (சுமார் ரூ.182 கோடி) நிதியுதவியை நிறுத்துவதாக அரசாங்க செயல்திறன் துறை கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் முடிந்த சில நாட்களில் இந்த அறிவிப்பு வெளியானது. இதற்கான உத்தரவில் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். அப்போதும் டிரம்ப் தனது அரசின் உத்தரவை நியாயப்படுத்தியிருந்தார். இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான நிதியுதவியை நிறுத்துவது தொடர்பான நிர்வாக உத்தரவுகளில் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். அதன் பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் இந்தியாவுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:- "இந்தியாவுக்கு 21 மில்லியன் டாலர் நிதியை நாம் ஏன் ஒதுக்க வேண்டும். இந்தியவிடம் அதிக பணம் உள்ளது. அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்த வரி விதிப்பால் நாம் தான் அதிகம் பாதிக்கப்படுகிறோம். இந்திய பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அதற்காக வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க 21 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டுமா? " எனப் பேசினார்.
-
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications