விவசாயத்துறைக்கு 19 பில்லியன் டாலர்.. வாரி வழங்கிய ட்ரம்ப்.. இந்தியாவில் 2வது நிதி பேக்கேஜ் எப்போது?
வாஷிங்டன்: விவசாயத்துறைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 19 பில்லியன் டாலர் நிதி பேக்கேஜை அறிவித்துள்ளார்.
"உலகளாவிய தொற்றுநோயின் தாக்கத்தை சமாளிக்கும் வகையில் அமெரிக்க பெரிய விவசாயிகளுக்கும் பண்ணையாளர்களுக்கும் 19 பில்லியன் டாலர் நிவாரண திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்" என்று டிரம்ப், ஒரு, செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

விவசாயத் துறை செயலாளர் சோனி பெர்ட்யூ கூறுகையில், பள்ளிகளும் உணவகங்களும் மூடப்பட்டு அதிகமான அமெரிக்கர்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். வீட்டிலேதான் மக்கள் சமைத்து சாப்பிடுவதால், விவசாய சந்தையில் தீவிர மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது உணவு விநியோகச் சங்கிலியை சீர்குலைத்துள்ளது. பல இடங்களில் விவசாயிகள் பால் உற்பத்தியை நிறுத்தியுள்ளனர். அல்லது வீணாக சாலையில் ஊற்றியுள்ளனர். பயிர்களும் வீணாகியுள்ளன.
சந்தைக்குத் தயாரான காய்கறிகள் மீது கலப்பையால் உழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது., விவசாயிகளுக்கு நிதி ரீதியாக கஷ்டத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவற்றை உற்பத்தி செய்பவர்களின் மனதை பாதிக்கும் விஷயமாகும்.
எனவேதான், இதுபோன்ற பேக்கேஜ் அவசியப்படுகிறது. சுமார் 3 பில்லியன் டாலர் பணம் விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களையும், பால் வாங்குவதற்கும், அதை சமூக உணவு வங்கிகளுக்கு மறுபகிர்வு செய்வதாகவும் பயன்படுத்தப்படும் என்று, பெர்ட்யூ கூறினார். அமெரிக்காவில், வேலை இழப்பு அதிகரித்துள்ள நிலையில், உணவு மற்றும் மளிகைப் பொருட்களை உற்பத்தி செய்வதை நோக்கி, மக்கள் செல்ல ஆரம்பித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அமெரிக்க பண்ணை மற்றும் உணவுத் தொழில் பல வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாய பொருள் உற்பத்தி மற்றும் அறுவடை செய்ய தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. இதனால் விவசாய உற்பத்தி பொருட்கள் வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
"பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், உணவகங்கள், பார்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், இப்போதைக்கு, பால், இறைச்சி, பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற உணவுகளை வாங்குவதில்லை, இதனால் விவசாய உற்பத்தி மற்றும் கால்நடை விலையில் சரிவு ஏற்படுகிறது" என்று அமெரிக்க பண்ணை நிர்வாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே 2 டிரில்லியன் மதிப்புக்கான நிதி பேக்கேஜை ட்ரம்ப் அரசு அறிவித்திருந்தது. இப்போது விவசாயிகளுக்காக தனியாக 19 பில்லியன் டாலர் நிதி பேக்கேஜை அறிவித்துள்ளது. அதேநேரம், மத்திய அரசு, ரூ.1.7 லட்சம் கோடிக்கு பேக்கேஜ் அறிவித்தது. இது மார்ச் 27ம் தேதி. இதன்பிறகு, இதுவரை வேறு பேக்கேஜ்கள் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications