"டிரம்பின் ஈகோ.. இந்தியாவை இழப்பது அமெரிக்காவுக்கே நஷ்டம்!" வெளிப்படையாகவே எச்சரித்த அமெரிக்க எம்பி
வாஷிங்டன்: இந்தியா மீது டிரம்ப் விதித்த வரிகள் இரு நாட்டு உறவைக் கடுமையாகப் பாதிப்பதாக இருக்கிறது. இதற்கிடையே அமெரிக்க எம்பி ஒருவரே டிரம்ப்பின் நடவடிக்கைகளைச் சாடியிருக்கிறார். டிரம்ப் வரி இந்தியா உடனான உறவுக்கு அச்சுறுத்தலாக மாறியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், டிரம்ப்பின் ஈகோவிற்காக இந்தியாவை இழக்க முடியாது எனச் சாடியுள்ளார்.
இந்தியா மீது டிரம்ப் 50% வரியை விதித்திருந்தார். ரஷ்யக் கச்சா எண்ணெய்யை வாங்குவதால் வரியை விதிப்பதாக அவர் அறிவித்தார். இது இரு நாட்டு உறவுகளை மிகக் கடுமையாகப் பாதிப்பதாக இருந்தது. இதனால் இரு நாட்டு வர்த்தகமும் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவானது. இதற்கிடையே அமெரிக்க எம்பி ஒருவரே டிரம்பை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்க எம்பி
பல ஆண்டுகளாக வளர்ந்து வந்த இந்தியா அமெரிக்கா உறவு அதிபர் டொனால்ட் டிரம்பின் அலட்சியமான வெளியுறவுக் கொள்கை காரணமாக இப்போது ஆபத்தில் இருப்பதாக அமெரிக்க எம்பி சிட்னி கம்லாகர்-டோவ் கூறியிருக்கிறார். டிரம்பின் அலட்சியம் அமெரிக்கா இந்தியா உறவை காலி செய்வதாகவும் அவர் எச்சரித்துள்ளார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு டிரம்பின் குடியரசு கட்சியினர் மவுனமாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா அமெரிக்கா உறவு
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான வெளியுறவுக் குழுவின் உறுப்பினரான கம்லாகர்-டோவ் மேலும் பேசுகையில், "ட்ரம்ப் தனது போக்கை திருத்திக் கொள்ள வேண்டும். டிரம்பின் அலட்சியமான வெளியுறவுக் கொள்கை பல ஆண்டுகளாக மிகச் சிறப்பாக இருந்த அமெரிக்கா- இந்தியா உறவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. குடியரசுக் கட்சியினர் இதைப் பார்த்தும் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார்கள். இந்தியா அமெரிக்கா உறவு முக்கியமானது. டிரம்பின் ஈகோவுக்காக அதைப் பலியிட முடியாது" என்றார்.
மேலும், முன்னாள் அதிபர் ஜோ பைடனின் சாதனையைப் பாராட்டிய கம்லாகர்-டோவ், "பாதுகாப்பு, முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் குவாட் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்திய பைடன், இரு நாடுகள் இடையேயான உறவை புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றார். ஆனால், ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி போடுகிறேன் எனத் தடாலடியாக அறிவித்து பைடன் வளர்த்த உறவை சீர்குலைத்தார்.
டிரம்ப் ஈகோ
டிரம்பின் அலட்சியமான வெளியுறவுக் கொள்கை பல ஆண்டு உறவைச் சீர்குலைத்தது. அவரது ஈகோ தூண்டப்பட்டதால் மட்டுமே இந்தியாவுக்கு திடீரென 50 சதவீத வரியை விதித்தார். டிரம்ப் செய்த தவறை அவரது குடியரசு கட்சியினர் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் எதுவுமே சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார்கள். டிரம்ப் டீமுக்கு கட்டுப்பட்டவர்களாக மாறிவிட்டனர்.
இப்போது நிலைமையைச் சமாளிக்க ஒரே வழிதான் இருக்கிறது. சர்வதேச போட்டியை எதிர்கொள்வதற்கு அமெரிக்கா- இந்தியா ஒத்துழைப்பு அத்தியாவசியமானது. இதனால் சீக்கிரம் இந்தியா உடன் ஒரு ஒப்பந்தம் போட்டுப் பாதிப்பை சரிசெய்ய வேண்டும். இந்த நாட்டிற்காகவும், இந்தியாவுடனான நமது உறவை மேம்படுத்தவும் டிரம்ப் வேகமாகச் செயல்பட வேண்டும்" என்றார்.
பின்னணி
இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் ஜனநாயக கட்சியினர் டிரம்பின் வர்த்தக கொள்கைகள் குறித்து கவலை தெரிவித்து வருகிறார்கள். ஆசியாவில் சீனாவை கவுன்டர் செய்ய இந்தியாவைத் தான் அமெரிக்கா நம்பி வந்தது. அப்படியிருக்கும்போது டிரம்ப் திடீரென தடாலடியாக வரிகளை விதிப்பது இரு நாட்டு உறவைப் பாதிக்கும் என்றும் இது சீனாவை நோக்கி இந்தியாவைத் தள்ளும் என்றும் அங்குள்ள ஜனநாயகக் கட்சியினர் தொடர்ந்து கவலை தெரிவிக்கும் நிலையில், அதன் வெளிப்பாடாகவே கம்லாகர்-டோவ்வின் பேச்சு இருக்கிறது.
-
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications