மூளையை கட்டுப்படுத்தும் சிப்.. மனதில் பட்டதை சொல்லும்.. விரைவில் மனித சோதனை!
வாஷிங்டன்: மனித மூளையை சிப் மூலம் கட்டுப்படுத்தும் மருத்துவப் பரிசோதனையை எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம் விரைவில் தொடங்குகிறது.
Recommended Video
அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், உலக பணக்காரர்களில் ஒருவர். இவருக்கு சொந்தமாக டெஸ்லா எனும் கார் உற்பத்தி நிறுவனமும் ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி சுற்றுலா பயணத்திற்கான நிறுவனமும் இயங்கி வருகிறது.
அது போல் நியூராலிங்க் எனும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். பல புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் அதீத ஆர்வம் கொண்டவர். மனித மூளையை இயந்திரங்களுடன் இணைக்கும் தொழில்நுட்பத்தை ஆராய இவர் தொடங்கியதுதான் நியூராலிங்க்.

மனித மூளை
இந்த தொழில்நுட்பம் வாயிலாக மனித மூளையில் ஒரு சிறிய சிப் பொருத்தப்படும். அந்த சிப்பின் செயல்பாடுகளை கம்ப்யூட்டர், மொபைல் போன்ற சாதனங்களுடன் இணைக்க வேண்டும். இந்த சாதனங்களை கையால் தொடாமலேயே நினைவுகள் வாயிலாக இயக்க முடியும். மனித மூளை என்ன நினைக்கிறது என்பதையும் இந்த சாதனங்களில் பதில் செய்ய முடியும்.

முக்கிய அம்சம்
இந்த சிப்பின் முக்கிய அம்சம் என்னவெனில் மனித மூளையில் ஏற்படும் முடக்குவாதம், நரம்பியல் பிரச்சினைகள், பாதிப்புகள் குறித்து சரி செய்ய முடியும். இந்த ஆய்வு குறித்து கடந்த 2016 ஆம் ஆண்டு எலான் மஸ்க் அறிவித்திருந்தார். அந்த நிறுவனம் பன்றிகள், குரங்குகளில் பரிசோதனை செய்துள்ளது. அப்போது குரங்குகளின் எண்ணவோட்டத்தை கொண்டு அவை வீடியோ கேம் விளையாட அனுமதிக்கப்பட்டது.

சிப்கள்
தற்போது மனிதர்கள் மூளையில் சிப்களை பொருத்தி ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக நியூராலிங்க் நிறுவனம் மருத்துவ நிபுணர்களை பணியில் அமர்த்த உள்ளது. இதற்காக கலிபோர்னியாவில் ஃப்ரீமாண்ட்டில் உள்ள இந்த நிறுவனம் புதுவிதமான எண்ணங்களை கொண்ட மருத்துவர்களும் என்ஜினியர்களும் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளது.

நியூராலிங்க்
அது போல் இவ்வாறு கட்டமைக்கப்படும் குழுவானது நியூராலிங்கின் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். எனவே மருத்துவ நிபுணர்கள் கிடைத்தவுடன் மனித மூளையில் சிப்களை பொருத்தும் சோதனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவு மற்றும் மருந்து நிறுவனத்தின் அனுமதிக்காகவும் நியூராலிங்க் காத்திருக்கிறது.

மூளையை கட்டுப்படுத்தும் சிப்
இந்த சிப் மூலம் முதுகுதண்டுவடத்தில் ஏதேனும் காயங்கள் இருந்தாலும் அதை முற்றிலும் குணப்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது முற்றிலும் பாதுகாப்பானது. இதை தேவைப்படாவிட்டால் பாதுகாப்பாக நீக்கிவிடலாம். மண்டை ஓட்டில் கொஞ்சம் சதையுடன் சேர்த்து வைக்கப்படும் இந்த சிப் வயர்லஸ் சார்ஜ் மூலம் சார்ஜ் செய்யலாம். எனவே இந்த சிப் பொருத்தப்பட்டவர் இயல்பாக உணரலாம். 2020 ஆம் ஆண்டு மனித மூளையில் சிப்பை பொருத்திவிடலாம் என எலான் மஸ்க் கருதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications