பாலைவனத்தின் நடுவே மர்ம உலோகத் தூண் திடீர் மாயம்.. ஒருவேளை வச்சதும், எடுத்ததும் அவர்கள்தானோ!
வாஷிங்டன்: அமெரிக்காவில் பாலைவனத்தின் நடுவே மர்மமான முறையில் நிலை நிறுத்தப்பட்டிருந்த உலோகத் தூண் மாயமாகியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் உள்ள பாலைவன பகுதியில் கடந்த 18-ஆம் தேதி வனத்துறை அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பாலைவன பகுதியின் மையத்தில் ஏதோ பளபளவென இருந்தது.
சற்று அருகில் ஹெலிகாப்டரை கொண்டு சென்ற போது ஏதோ உலோகத் தூண் ஒரு நிற்க வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மர்ம உலோகத் தூண்
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த மர்ம உலோகத் தூணை பாலைவன பகுதியில் உள்ள அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய சென்றனர். அப்போது பாலைவனத்தில் யாரும் இல்லாத இடத்தில் மர்மமான முறையில் 12 அடி உயரம் கொண்ட சில்வர் உலோகத் தூண் நிற்க வைக்கப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ்
இந்த தூணை யார் நிறுத்தியது, இந்த இடத்திற்கு எப்படி கொண்டு வரப்பட்டது என்பது போன்ற எந்த விவரமும் அவர்களுக்கு தெரியவில்லை. ஏற்கெனவே கொரோனா வைரஸாலும் அது சரியாக எங்கு பரவியது என்பது தெரியாமல் உலகமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

சமூகவலைதளவாசிகள்
இந்த நிலையில் பாலைவனத்தில் உலோகத் தூண் ஒன்று மர்மமாக நிறுத்தப்பட்டிருந்த தகவலால் உலகமே பீதி அடைந்தது. இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலானது. இதையடுத்து சமூகவலைதளவாசிகள், ஒரு வேளை ஏலியன்களின் வேலையாக இருக்குமோ என மற்றொரு தகவலை பரப்பினர்.

பஞ்சமில்லை
இதனால் இந்த உலோகத் தூண் குறித்து அரிய மக்கள் ஆர்வம் காட்டினர். இந்த நிலையில் இந்த உலோகத் தூணை நிறுத்தியது யார் என அறிய பாலைவன அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் பரபரப்புக்கு பஞ்சமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த உலோகத் தூண் நேற்று முன் தினம் இரவு மாயமாகியுள்ளது.

தனியார் இடம்
அந்த தூணை தாங்கள் எடுத்துச் செல்லவில்லை என யூட்டா மாகாணத்தின் நில மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர். அதே வேளையில் இதை எடுத்துச் சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்த பாலைவனப்பகுதி தனியாருக்கு சொந்தமானது என்பதால் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications