அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் பலன் தருகிறது.. ஆய்வில் தகவல்
வாஷிங்டன்: கொரோனாவுக்கான அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் பலனை தருவதாக ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தங்கள் மருந்தை அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க கோரி அமெரிக்க மருந்து பாதுகாப்பு நிறுவனத்தில் மாடர்னா விண்ணப்பிக்கவுள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவால் ஒரு நாளைக்கு 1,60,000 பேர் பாதிக்கப்படுகிறார்கள். தினந்தோறும் 1400 க்கும் மேற்பட்டோர் பலியாகின்றனர். சீனாவில் இருந்து பரவிய வைரஸ் உலகம் முழுவதும் 14 லட்சத்திற்கும் அதிகமானோரை கொன்றுள்ளது.

இதனால் கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் இறங்கியுள்ளன. அது போல் அமெரிக்காவில் மாடர்னா எனும் நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது.
இந்த நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை 30 ஆயிரம் பேருக்கு சோதனை ஓட்டமாக செலுத்தப்பட்டது. இதில் 100 சதவீதம் பலனை தருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க கோரி அமெரிக்க மருந்து பாதுகாப்பு நிறுவனத்தில் மாடர்னா விண்ணப்பித்துள்ளது.
ஒரு வேளை மாடர்னா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் 20 மில்லியன் மருந்துகள் தயாரிக்கப்படும். ஒருவருக்கு இரு டோஸ்கள் தேவைப்படுகிறது. எனவே இந்த நிறுவனம் தயாரிக்கும் மருந்து 10 மில்லியன் பேருக்கு சரியாக இருக்கும்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிபிசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்து 90 சதவீதம் அளவிற்கு கொரோனா தொற்றிலிருந்து காக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு பிறகு மாடர்னா நிறுவனம் தங்களது மருந்துகள் 95 சதவீதம் பலனை தருவதாக மாடர்னா கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது மாடர்னாவின் தடுப்பு மருந்து 100 சதவீதம் பலனளிப்பதாக ஆய்வுகளில் தெரியவந்தது. மாடர்னா தடுப்பு மருந்தை 6 மாத காலத்திற்கு 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்து வைக்கலாம். இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸை போன்ற ஒரு வைரஸை உடலில் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் வகையில் உள்ளது.
சோதனை முயற்சியாக 30 ஆயிரம் பேரில் 15 ஆயிரம் பேருக்கு இந்த மருந்து 4 வாரங்கள் இடைவெளியில் இரு டோஸ்களாக வழங்கப்பட்டன. மீதமுள்ள 15 ஆயிரம் பேருக்கு டம்மி ஊசிகள் செலுத்தப்பட்டன. மொத்தம் ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்ட 196 கொரோனா கேஸ்களில் 185 பேர் சோதனை ஓட்டத்திற்காக வந்தனர்.
அவர்களில் 11 பேருக்கு உண்மையான வேக்சின் வழங்கப்பட்டது. பிபிசர் நிறுவனம் உலகம் முழுவதும் டிசம்பர் மாதம் 50 மில்லியன் ஊசிகளை தயார் செய்ய முடிவு செய்துள்ளது.
-
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications