ஆண்ட்ரமேடாவில் ஒளிவட்டம்.. விண்வெளி ஆய்வில் மைல்கல்.. ஹப்பிள் தொலைநோக்கியின் வாவ் கண்டுபிடிப்பு!
ஆண்ட்ரமேடா பால்வெளியில் ஒளிவட்டம் இருப்பதை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வாஷிங்டன்: ஆண்ட்ரமேடா பால்வெளியில் வாயு போன்ற ஒளிவட்டம் இருப்பதை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆண்ட்ரமேடா விண்மீன் குழு என்பது ஒரு சுருள்வகைப் பால்வெளி ஆகும். இது நமது பூமியில் இருந்து சுமார் 780 கிலோபார்செக்குகள் (2.5 மில்லியன் ஒளியாண்டுகள்) தொலைவில் உள்ளது. ஆண்ட்ரமேடா பால்வெளியை, மெசியர் 31 அல்லது எம்31 என்றும் அழைக்கின்றனர். இது நமது பால்வெளியாகிய பால்வழிக்கு (Milkyway Galaxy) மிக அருகில் உள்ள பெரிய பால்வெளியாகும்.

ஆண்ட்ரமேடா பால்வெளியில் சுமார் ஒரு டிரில்லியன் விண்மீன்கள் இருப்பது கடந்த 2006ம் ஆண்டில் கண்டறியப்பட்டது. இதுகுறித்து ஆராய்ச்சிகளை நாசா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த ஆய்வு ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
அதாவது ஆண்ட்ரமேடா பால்வெளியில் வாயு போன்ற ஒளிவட்டம் இருப்பது நாசாவின் ஹப்பிள் தொலைக்நோக்கியின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒளிவட்டத்தில் இரண்டு முக்கிய உள்ளமைகள் மற்றும் தனித்துவமான வாயு குண்டுகள் என ஒரு அடுக்கு அமைப்பு உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். விண்மீனைச் சுற்றியுள்ள ஒளிவட்டத்தின் மிக விரிவான ஆய்வு இதுவாகும்.
"பால்வெளியில் வாயு போன்ற ஒளிவட்டம் நிறைந்திருப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது எதிர்காலத்தில் நட்சத்திரங்களின் உருவாக்கத்திற்கு மிக முக்கியமான உந்துசக்தியாக இருக்கும். அதேபோல் சூப்பர்நோவா போன்ற நிகழ்வுகளுக்கும் இது முக்கிய காரணியாக இருக்கும்", என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.
விண்வெளி ஆய்வில் இந்த கண்டுபிடிப்பு ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. ஆண்ட்ரமேடா விண்மீன் குழுவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பூமியின் மீது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த ஆய்வுகளை நாசா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications