பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி.. ரூ.90 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து.. ஏன் முக்கியம்?
வாஷிங்டன்: பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது 26 ரஃபேல் விமானங்கள் மற்றும் 3 நீர்மூழ்கி கப்பல்கள் வாங்குவது தொடர்பாக ரூ.90 ஆயிரம் கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது என கூறப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டில் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், பிரான்ஸ் அதிபரின் அழைப்பை ஏற்றுக்க்கொண்ட பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டார். 2 நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி புறப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி, அங்கு அதிபர் மேக்ரான் மற்றும் அந்நாட்டு பிரதமர் எலிசபெத் போர்ன் ஆகிய தலைவர்களை சந்தித்து பேச இருக்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது 26 ரஃபேல் விமானங்கள் மற்றும் 3 ஸ்கோர்பியன் நீர்மூழ்கி கப்பல்கள் வாங்கவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. ரூ.90 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.
பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணத்தை முடித்த பின்னர் பிரதமர் மோடி அப்படியே ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். அதாவது ஜூலை 15-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் பிரதமர் மோடி அங்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் முகமது பின் சாயீத் அல்நஹ்யானை சந்தித்து பேச இருக்கிறார்.












Click it and Unblock the Notifications