உச்சத்தில் ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றம்... "அமெரிக்கர்களே, நாடு திரும்புங்க" ஜோ பைடன் திடீர் அழைப்பு
வாஷிங்டன்: ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் உக்ரைன் வாழ் அமெரிக்கர்கள் உடனே நாடு திரும்ப வேண்டும் என ஜோபைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நீடிக்கிறது. உக்ரைன் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதே பிரச்னைக்கு காரணமாகும். இருநாடுகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளது.

படைகளை குவிக்கும் ரஷ்யா
இருப்பினும் 2021 நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருகிறது. ஒரு லட்சத்துக்கும் அதிக வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஜோபைடன் வேண்டுகோள்
இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உக்ரைன் வாழ் அமெரிக்கர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்துள்ளது. 1 லட்சத்து 30 ஆயிரம் வீரர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது போர் ஏற்படும் வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதனால் உக்ரைன் வாழ் அமெரிக்கர்கள் உடனே நாடு திரும்ப வேண்டும்.

மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்
உலகில் பலம்படைத்த ராணுவத்தை நாங்கள் கையாள்கிறோம். இந்த வித்தியாசமான சூழலில் சில விஷயங்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் முன்கூட்டியே அமெரிக்கர்கள் நாடு திரும்ப வேண்டும். ஏனென்றால் அமெரிக்கா, ரஷ்யா இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டால் அது உலகில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்'' எனக்கூறினார்.

ரஷ்யாவுக்கு கண்டனம்
மேலும் ரஷ்யாவின் செயலுக்கு பல்வேறு ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. நில ஆக்கிரமிப்பு நோக்கத்தில் ராணுவ வீரர்களை அச்சுறுத்துவது நாடுகளின் ஒற்றுமையை கேள்விக்குறியாக்கும் என தெரிவித்துள்ளன.

தேவையில்லாத பதற்றம்
ரஷ்யா ராணுவம் தரப்பில், ‛‛வீரர்கள் பயிற்சியில் தான் ஈடுபடுகிறார்கள். போர் தொடுக்கும் நோக்கம் இல்லை. பயிற்சி முடிந்து வீரர்கள் வீடு திரும்ப உள்ளனர்''என கூறினார். உக்ரைன் அதிபர் வோலோடிமர் ஜிலென்ஸ்கி கூறுகையில், ‛‛எல்லையில் படைகளை குவிப்பது அண்டை நாட்டுக்கு தேவையில்லாத பதற்றத்தை கொடுக்கும்'' என கூறப்பட்டுள்ளது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications