Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வானத்திலிருந்து கொட்டிய மீன் மழை.. அதிசயித்துப்போன அமெரிக்க மக்கள்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அரிதான வகையில் வானிலிருந்து மீன் மழை பொழிந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மீன் மழை அல்லது விலங்கு மழை என்பது வானிலையில் ஏற்படும் மிகவும் அரிதான நிகழ்வாகும் வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே பல நாடுகளில் நடந்ததாக தகவல்கள் உள்ளன. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்படும்போது கடல் அல்லது ஏரி போன்றவற்றின் மேற்பரப்பில் திடீரென காற்று சூடாகும் போது அது விரைந்து மேலெழும்புகிறது. அவ்வாறு காற்று மேலெழும்பும் போது அந்த வெற்றிடத்தை நோக்கி கடல்நீர் எழும்பி வரும்.

அப்போது கடல் பரப்பில் இருக்கும் தவளைகள் மீன்கள் சிப்பிகள் போன்றவை நீருடன் சேர்ந்து மேலெழும்பி காற்றுடன் பயணப்பட்டு சிறிது தொலைவில் கடலிலோ அல்லது கடற்கரை நகரங்கள் மழையாய் பொழியும். இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே சிங்கப்பூர் பிரான்ஸ் ஈரான் ஆகிய பகுதிகளை நடைபெற்றதாக தகவல்கள் உள்ள நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இது போன்ற மீன் மழை பொழிந்து உள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

டெக்சாஸில் மீன் மழை

டெக்சாஸில் மீன் மழை

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெக்சாஸ் நகரில் டெக்சர்கானா பகுதியில் வியாழன் அன்று பெய்த மழையுடன் வானிலிருந்து மீன்கள் விழுவதைக் கண்டு அங்கு வசித்த பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். இதுகுறித்து டெக்சாஸின் இந்த சிட்டி ஆப் டெக்சர்கானாவின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் 2021 ஆம் ஆண்டு டெக்சர்கானாவில் மீன் மழை பொழிவது, பல வினோத உண்மைகளை வெளியே கொண்டுவந்துள்ளது எனக் கூறி உள்ளது.

வானிலை மாற்றத்தால் மீன்மழை

வானிலை மாற்றத்தால் மீன்மழை

இதுபற்றி அந்த மேலும் அந்த பேஸ்புக் பக்கத்தில், விலங்கு மலை என்பது தவளைகள் நண்டுகள் மற்றும் சிறிய மீன்கள் போன்றவை பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் வானியல் மாற்றத்தால் உள்ளிழுக்கப்பட்டு மீண்டும் மழையாய் பொழியும் நிகழ்வு எனவும், மழை பெய்யும் போது அவை கீழே விழுவது மிகவும் அசாதாரணமானது என்றாலும் இன்று பல இடங்களில் நடைபெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

மக்கள் திகைப்பு

மக்கள் திகைப்பு

இந்த மழை குறித்து அப்பகுதி வாசிக்கும் ஒருவர் கூறும்போது, 20 ஆண்டுகளுக்கு முன்பு எனது பன்றிப் பண்ணையில் தவளைகள் மழை பெய்ததாக சொன்னபோது எனக்கு பைத்தியம் பிடித்ததாக அப்பகுதி மக்கள் கூறியதாகவும், தற்போது மீன் மழை பொழிவது பார்த்து என்னை கேலி செய்தவர்கள் திகைத்து நின்றனர் எனவும், இந்த மாற்றத்தால் உலகம் அழிந்து போகிறது என தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள மற்றொரு நபர், மீன் மழையால் தங்கள் பகுதிகளைச் சேர்ந்த பூனைகள் சந்தோசமாக திரிவதாக நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார். சிலர் மீன்மழை குறித்து ஆவணப்படுத்தும் வகையில் அப்பகுதிகளில் ஊடகவியலாளர்களை அழைத்து சென்று வீடியோவும் எடுத்தனர்.

மக்களுக்கு சுகாதார பிரச்சினை

மக்களுக்கு சுகாதார பிரச்சினை

மீன் மழை ஒருபுறம் ஆச்சரியத்தை அளித்தாலும் துப்புரவு நடவடிக்கைகளை சரியான நேரத்தில் தொடங்காவிட்டால் இறந்த நீர்வாழ் விலங்குகளால், மக்களுக்கு உடல்நலம் மற்றும் சுகாதார பிரச்சினைகள் ஏற்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவில் விலங்கு மழை பொழிவது இது முதல் முறையல்ல, கலிபோனியா மற்றும் வடமேற்கு செர்பியா போன்ற இடங்களை இதற்கு முன்பு விலங்கு மழை பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+