ஜோ பிடன் வெற்றி செய்தி வெளியானபோது கோல்ப் விளையாடிக் கொண்டிருந்த டொனால்ட் டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றுவிட்டதாக செய்திகள் வெளியான போது டொனால்ட் டிரம்ப் கோல்ப் விளையாட்டில் படுதீவிரமாக இருந்தாராம்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை உடனே துவங்கிய போதும் யார் வெற்றி பெற்றார்? என அறிவிப்பதில் இழுபறி நீடித்தது.

ஒருவழியாக ஜோ பிடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் டொனால்ட் டிரம்ப்போ, திங்கள்கிழமை முதல் வழக்குகள் போடப் போவதாக எச்சரித்திருக்கிறார்.
இதனிடையே ஜோ பிடன் வெற்றி பெற்றுவிட்டதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்ட போது, ஹாயாக கோல்ப் மைதானத்தில் டொனால்ட் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்தாராம். இது தொடர்பான வீடியோக்கள் இப்போது வெளியாகி உள்ளன.
மேலும் கோல்ப் மைதானம் முன்பாக ஜோ பிடன், டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் என இருதரப்புமே கூடியதால் அங்கும் பரபரப்பும் ஏற்பட்டதாம். பின்னர் டிரம்ப் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாராம்.












Click it and Unblock the Notifications