அமெரிக்கா உள்பட இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதல்களிலும் சுலைமானிக்கு பங்குண்டு.. டிரம்ப் குண்டு
Recommended Video
வாஷிங்டன்: இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் ஈரான் படை தலைவர் சுலைமானிக்கு பங்கு உண்டு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரான் நாட்டு படைத்தலைவர் காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். சுலைமானி கொலை உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை அதிபர் டிரம்ப் நியாயப்படுத்தியுள்ளார். நேற்று புளோரிடா மாகாணத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் அண்மையில் ஈராக்கில் அமெரிக்காவின் இலக்குகளை குறிவைத்து வான்வழி தாக்குதல்களை நடத்தியது. இதில் அமெரிக்கர் ஒருவர் பலியானார். 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

இந்தியா
பாக்தாத்தில் அமெரிக்க தூதரகத்தின் மீதும் வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டது. இவற்றுக்கு மூளையாக செயல்பட்டது சுலைமானி. அவர் அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளார். இந்தியா உள்பட உலக நாடுகளில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் அவருக்கு பங்கு உண்டு.

உயிர்கள்
இன்று சுலைமானி கொல்லப்பட்டதன் மூலம் அவரது பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிட்டது. அமெரிக்கா இந்த தாக்குதலை நீண்ட காலத்துக்கு முன்பே நடத்தியிருக்க வேண்டும். அவ்வாறு நடத்தியிருந்தால் ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.

சுலைமானி
அண்மையில் ஈரானில் நடந்த போராட்டத்தின் போது அந்த நாட்டில் சொந்த மக்கள் 1000 பேர் கொல்லப்பட்டனர். இதை நடத்தியதும் சுலைமானிதான். இந்த நடவடிக்கையை நாங்கள் எடுக்கக் காரணம் போர் வராமல் பார்த்துக் கொள்ளத்தான்.

மறைமுக போராளிகள்
ஈரான் மக்கள் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். அவர்கள் வளமான பாரம்பரியமும் கட்டுக்கடங்காத ஆற்றலும் கொண்டவர்கள். எங்களுக்கு ஈரானில் ஆட்சி மாற்றம் தேவையில்லை. ஆனால் அண்டை நாடுகளை சீர்குலைக்க மறைமுக போராளிகளை பயன்படுத்துதல் போன்றவற்றை இப்போது முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications