காஷ்மீரில் இதுக்கு உடனே முடிவுகட்டுங்க.. அமெரிக்க எம்பிக்கள் வெளியுறவு அமைச்சருக்கு பரபர கடிதம்
Recommended Video
வாஷிங்டன்: ஜம்மு காஷ்மீரில் தகவல் தொடர்பு முடக்கத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் இதற்கு இந்திய அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு எம்பிக்கள் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.
அன்று முதல் தற்போது வரை காஷ்மீர் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

பாம்பியோவுக்கு கடிதம்
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு எம்பிக்கள் பரிமளா ஜெயபால் (இந்திய வம்சாவளி) மற்றும் ஜேம்ஸ் பி மெக்கோவன் ஆகியோர் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து கவலை தெரிவித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவிற்கு கடிதம் எழுதி உள்ளனர்.

தடுப்பு காவல்
அவர்கள் எழுதி உள்ள கடிதத்தில் "ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உடனடியாக தகவல் தொடர்பு முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை வேண்டும். இதேபோல் அங்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுக்க நடவடிக்கை வேண்டும். காஷ்மீரில் உயிர்காக்கும் மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் காஷ்மீர் மக்களின் சட்டசபை மற்றும் வழிபாட்டு உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டும்.
|
நம்பகமான அறிக்கைகள்
காஷ்மீரில் மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து மிகவும் கவலைப்படுகிறோம். குறிப்பாக இந்திய அரசு ஆயிரக்கணக்கான மக்களை எந்த வித உதவியும் இல்லாமல் தடுத்து வைத்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. ஊரடங்கு உத்தரவுகளை நடைமுறைப்படுத்தி, காஷ்மீரில் இணையம் மற்றும் தொலைப்பேசி தொடர்பை துண்டித்துள்ளதாகவும் சொல்கிறார்கள். இது தொடர்பான ஊடகவியலாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நம்பகமான அறிக்கைகளால் நாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளோம்.

மனித உரிமை பார்வையாளர்கள்
எனவே அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பான இந்த தகவல்களை விசாரிக்க சர்வதேச ஊடகங்கள் மற்றும் சுயாதீன மனித உரிமை பார்வையாளர்களை உடனடியாக ஜம்மு காஷ்மீருக்குள் அனுமதிக்க வேண்டும். இதற்கு இந்திய அரசுக்கு அமெரிக்க அரசு உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும்" என வலியுறுத்தி உள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications