இந்திய மாணவியை கார் ஏற்றி கொன்ற வழக்கு: கேலி பேசிய அமெரிக்க போலீஸ் அதிகாரி விடுவிப்பு.. என்ன நடந்தது
வாஷிங்டன்: அமெரிக்காவில் படித்து வந்த ஆந்திராவை சேர்ந்த மாணவி போலீஸ் ரோந்து வாகனம் மோதி உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய அமெரிக்க போலீஸ் அதிகாரி கேலி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அமெரிக்க போலீஸ் அதிகாரி மீதான வழக்கை தொடர முடியாது என சியாட்டில் அட்டார்னி கூறியுள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரில் ஆந்திராவை சேர்ந்த ஜானவி கண்டூலா என்ற மாணவி படித்து வந்தார். அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் முதுநிலை படித்து வந்த ஜானவி கண்டுலா மீது போலீஸ் ரோந்து வாகனம் மோதியது. மணிக்கு 120 கி.மீட்டர் வேகத்தில் வந்த போலீஸ் ரோந்து வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மாணவி அங்கேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தை ஏற்படுத்திய ரோந்து வாகனத்தை கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரி ஓட்டி வந்தார். விபத்துக்கு பின், சியாட்டி போலீஸ் அதிகாரியை தொடர்பு கொண்டு பேசிய டேனியல், மாணவி குறித்து கேலியாக பேசி சிரித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதாவது, உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு பேசிய போலீஸ் அதிகாரி டேனியல், "இறந்த பெண் ஒரு சாதாரணமான ஒருவர் தான்.
பெரும் மதிப்பு மிக்க நபர் அல்ல. அவருக்கு 11,000 டாலர் காசோலையே போதும்" என சிரித்துக்கொண்டே பேசினார். அவரது சட்டையில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
விபத்தில் பலியான இந்திய மாணவியின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் கேலியாக பேசிய போலீஸ் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க எம்.பிக்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், போலீஸ் அதிகாரி மீதான வழக்கு, கைவிடப்படுவதாகவும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தொடர போவது இல்லை என்றும் கிங் கவுண்டி மாகாணத்தின் அட்டார்னி லீசா மானியன் தெரிவித்துள்ளார். போலீஸ் அதிகாரி மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்றும் அட்டார்னி லீசா மானியன் கூறியுள்ளார்.
-
ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை தொடங்கிவிட்டோம்.. நெருங்கினால் பேரழிவு! டிரம்ப் வார்னிங் -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
அமெரிக்காவின் 'ஹார்முஸ்' முற்றுகையில் இங்கிலாந்து பங்கேற்காது.. ட்ரம்ப்புக்கு 'நோ' சொன்ன பிரிட்டன் -
ஆப்பு வச்சுடுச்சே அமெரிக்கா..ஈரானை வட்டமிட்ட ஸ்டீல் அரக்கன்கள்! படபடவென பறந்த எண்ணெய் ரேட்! சிக்கல்? -
டிரம்ப்பிற்கு பதிலடி கொடுக்க வரும் புதின்? அமெரிக்காவுக்கு ‘செக்’ வைத்த ரஷ்யா! உலக போர் ஆபத்து? -
கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை டெஸ்ட் செய்த வடகொரியா.. அமெரிக்காவுக்கு ஷாக்! மாறும் போர் களம்! -
"5 vs 20.." விட்டு கொடுக்காத ஈரான்.. விடாப்பிடியாக இழுக்கும் அமெரிக்கா.. அடுத்து என்ன நடக்கும்? -
அதிபர் பதவியை இழக்கும் டிரம்ப்? களத்தில் இறங்கிய அந்த 70 பேர் + மாஜி அமெரிக்க உளவு துறை தலைவர்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications