வரியை நீக்கினால் அமெரிக்காவுக்கு பேரழிவு! நீதிமன்றத்தில் குட்டு வாங்கியும் அடங்காத டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்புகள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாக அமெரிக்க நீதிமன்றம் விளாசியுள்ள நிலையில் நீதிமன்ற தீர்ப்பு ஒட்டுமொத்த பேரழிவு என டிரம்ப் எதிர்வினையாற்றியுள்ளார். இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்து அது அமலில் உள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் நலியும் அபாயம் இருக்கிறது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளே டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை செய்தார். அதிலும் அவர் தற்போது வரி போரில் இறங்கியுள்ளார். அதாவது நாடுகள் மீது வரியை திணிப்பதை வரி போர், வரி யுத்தம் என்றழைப்பார்கள்.

இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு நாடுகளுக்கு அதிக வரிகளை விதித்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தி வருகிறார்.
இதுகுறித்து அமெரிக்க நீதிமன்றம் கூறுகையில், உலகில் உள்ள பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை டொனால்ட் டிரம்ப் விதித்துள்ளது சட்டவிரோதமானது. வணிகத்தின் இதயத்தில் அடிப்பது போன்றதாகும் என தீர்ப்பளித்தது. எனினும் மேல்முறையீடு செய்ய ஏதுவாக அக்டோபர் 14 வரை வரிவிதிப்புக்கு கோர்ட் தடைவிதிக்கவில்லை.
இதுகுறித்து டிரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அனைத்து வரிவிதிப்புகளும் அமலில்தான் இருக்கின்றன. இன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் நமது வரிவிதிப்புகளை நீக்க வேண்டும் என தவறாக கூறியுள்ளது.
ஆனால் இறுதியில் அமெரிக்கா வெல்லும் என்பது அவர்களுக்குத் தெரியும். வரிவிதிப்புகளை நீக்கினால் அது நாட்டிற்கு முழுமையான பேரழிவாக இருக்கும். அது நம்மை நிதி ரீதியாக பலவீனப்படும். அமெரிக்கா இனி மிகப் பெரிய வர்த்தக பற்றாக்குறைகள், நியாயமற்ற வரிவிதிப்புகள், பிற நாடுகளால் விதிக்கப்படும் வர்த்தக தடைகள் உள்ளிட்டவை நமது உற்பத்தியாளர்கள், விவசாயிகள், அனைவரையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். இதை ஏற்றால் இந்த முடிவு அமெரிக்காவையே அழித்துவிடும்.
நமது தொழிலாளர்களுக்கு உதவுவதற்கும் சிறந்த அமெரிக்க தயாரிப்பு பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கும் இந்த வரிவிதிப்பு முக்கிய பங்கு வகிக்கும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் உதவியுடன் நம் தேசத்தை காப்போம். அமெரிக்காவை மீண்டும் வலிமையான, சக்தி வாய்ந்த, பணக்கார நாடாக மாற்றுவோம். இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும்











Click it and Unblock the Notifications