Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய கல்வியாளர்களுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்கா! H-1B விசாவில் வரும் புதிய மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்தியா மீது வரி, அதை தொடர்ந்து H-1B விசாவுக்கு கட்டுப்பாடு, கட்டண உயர்வு என அமெரிக்க அரசு தொடர்ந்து இந்தியர்களை குறிவைத்து வருகிறது. இந்நிலையில், தற்போது இந்திய கல்வியாளர்கள் அமெரிக்காவுக்குள் வருவதை குறைக்கும் நோக்கில் புதிய விசா கட்டுப்பாடுகளை கொண்டு வர அந்நாட்டு அரசு முயற்சித்துள்ளது.

அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து திறமையான பணியாளர்களை வேலைக்கு எடுத்து வருகிறது. இதற்காக H-1B விசா பயன்படுகிறது. ஆனால் ஆண்டுக்கு 85,000 என்கிற அளவில்தான் வெளிநாட்டு ஊழியர்களை எடுக்க முடியும். இதுதான் லிமிட். இதுவே லாப நோக்கமற்ற நிறுவனங்கள், உதாரணமாக புற்றுநோய் குறித்து ஆய்வு நடத்தும் நிறுவனங்கள் மற்ற நாடுகளிலிருந்து எவ்வளவு ஆய்வாளர்களை வேண்டுமானாலும் பணிக்கு எடுக்கலாம். ஏனெனில் இது ஆய்வு நிறுவனம்.

H1B visa university US

அதேபோல பல்கலைக்கழகங்களும் இப்படி வெளிநாட்டு பணியாளர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் இந்திய கல்வியாளர்கள் அதிக அளவில் அமெரிக்காவில் பணியாற்றி வந்தனர். இப்படியான லாப நோக்கமற்ற சேவைக்கு ஆட்களை வேலைக்கு எடுக்க எந்த லிமிட்டும் கிடையாது. எவ்வளவு வேண்டுமானாலும் H-1B விசா மூலம் எடுத்துக்கொள்ளலாம்.

இந்நிலையில், இந்த திட்டத்திற்கு தற்போது அமெரிக்க அரசு முட்டுக்கட்டை போட இருக்கிறது. அதாவது, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான, டாம் காட்டன், H-1B விசா மூலம் அமெரிக்காவுக்குள் நுழைபவர்களை கட்டுப்படுத்த புதிய சட்ட திருத்த மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், லாப நோக்கமற்ற துறையில் H-1B விசா மூலம் பணியமர்த்தப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையை வரம்புக்குள் கொண்டுவர வழி வகுக்கிறது.

அதாவது இனி பல்கலைக்கழகம், ஆராய்ச்சி மையம் போன்ற லாப நோக்கமற்ற அமைப்புகளிலும் ஆண்டுக்கு 85,000 H-1B விசா பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இது இந்திய ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்களை கடுமையாக பாதிக்கும். மற்ற நாடுகளை விட இந்தியர்கள்தான் அதிக அளவில் H-1B விசாவை கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே H-1B விசாவுக்கு கட்டணம் அதிகரிகப்பட்டதால், இந்தியர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். அதன் தாக்கம் குறைவதற்குள் புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்கா அரசு கொண்டுவர முயற்சிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படி செய்தவன் மூலம் வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம் என அமெரிக்க அரசு நம்புகிறது. ஆனால் அறிவியல், கல்வி உள்ளிட்ட லாப நோக்கமற்ற துறைகளில் கூட்டு முயற்சி, கூட்டு ஆராய்ச்சி அவசியம். இதன் பலனை மொத்த உலகமும்தான் அனுபவிக்க போகிறது. எனவே இந்த துறைகளில் இப்படியான கட்டுப்பாடுகள் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+