புதிய தலைவலி! உருமாறிய 'XE' கொரோனா.. மிக வேகமாக பரவுதாம்! அடுத்த அலையை ஏற்படுத்துமா? WHO வார்னிங்
வாஷிங்டன்: சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், புதிய உருமாறிய கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கடந்த 2019 இறுதியில் சீனாவில் முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பின்னர், உலகின் அனைத்து நாடுகளையும் கொரோனா வைரஸ் அலறவிட்டது.
கொரோனா வேக்சின் பணிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை காரணமாக வைரஸ் பாதிப்பு மெல்லக் குறையத் தொடங்கியது. இதனால் உலகின் பல நாடுகள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரசை இதுவரை எந்தவொரு நாடும் முழுமையாக அழிக்கவில்லை. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருப்பதே அதற்கு முக்கிய காரணமாக உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா முதல் அலையை ஏற்படுத்தியது என்றால், அதன் பின்னர் ஆல்பா, டெல்டா மற்றும் ஓமிக்ரான் ஆகிய உருமாறிய கொரோனா வகைகள் அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தின. குறிப்பாக வேக்சின் தடுப்பாற்றாலும் புதிய உருமாறிய கொரோனாவுக்கு எதிராக குறைந்ததால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டது.

ஓமிக்ரான்
கடைசி அலையை ஏற்படுத்திய ஓமிக்ரான் கொரோனா பெரும்பாலும் லேசான பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலேயே இருந்தது. இதனால் அதிகப்படியான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போதிலும், தீவிர பாதிப்பும் உயிரிழப்பும் குறைவாகவே இருந்தது. இந்தச் சூழலில் உலக சுகாதார அமைப்பு XE என்ற புதிய வகை கொரோனா குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ஒமிக்ரான் BA.2 வகையை விட சுமார் பத்து சதவீதம் வேகமாகப் பரவும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதற்கு முன்பு வரை, ஓமிக்ரான் BA.2 கொரோனா தான் மிக வேகமாகப் பரவும் கொரோனா வகையாக இருந்தது.

புதிய XE உருமாறிய கொரோனா
இந்த புதிய XE உருமாறிய கொரோனா என்பது BA.1 மற்றும் BA.2 ஆகிய இரண்டு உருமாறிய கொரோனாவின் ஹைபிரிட் வேரியண்ட் ஆகும். இருப்பினும், நல்வாய்ப்பாக இப்போது இந்த உருமாறிய கொரோனா உலக அளவில் மிக குறைவான நபர்களுக்கு மட்டுமே ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு, "XE உருமாறிய கொரோனா (BA.1-BA.2), கடந்த ஜனவரி 19இல் இங்கிலாந்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது, இதுவரை 600 பேருக்கு மட்டுமே இந்த புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

வேகமாக பரவும்
மேலும். இந்தப் புதிய கொரோனா 10 சதவிகிதம் வரை வேகமாகப் பரவும் எனக் கணிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.. XE வேரியண்ட்டின் தீவிரத் தன்மையில் பெரியளவில் மாறுபாடு இல்லை என்றும் இப்போது வரை இதை ஓமிக்ரான் கொரோனாவின் ஒரு வகை பிறழ்வு என்றே குறிப்பிடப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உருமாறிய கொரோனா
சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா உலகெங்கும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர், பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்ட ஆல்பா கொரோனா உலகெங்கும் பரவியது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. கடைசியாகத் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் நாட்டில் 3ஆவது அலையை ஏற்படுத்தியது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications