உடலை குளிரவைக்கும் வெந்தயக் கஞ்சி! சர்க்கரை நோய், வயிற்றுப்புண்ணை ஆற்றும் மருந்து!
Fenugreek Rice Porridge Recipe In Tamil: கோடை காலத்தின் சுட்டெரிக்கும் வெயிலில் உங்கள் உடல் சூடு அதிகரித்து அவதிப்படுகிறீர்களா? செரிமானக் கோளாறுகள் மற்றும் அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்புண் உங்களை மிகவும் வாட்டுகிறதா? இதற்கு மிகச்சிறந்த தீர்வுதான் இந்த வெந்தயக் கஞ்சி. நம் முன்னோர்கள் காலம் காலமாகப் பின்பற்றி வந்த இந்த அற்புதமான உணவு முறை, வெறும் வயிறு நிரப்பும் உணவு மட்டுமல்ல, உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களையும் அள்ளித் தரும் ஒரு இயற்கை மருந்தாகும்.
இந்த வெந்தயக் கஞ்சியில் நாம் சேர்க்கும் வெந்தயம் மற்றும் பூண்டு ஆகியவை எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வெந்தயம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த உதவுவதோடு, உடலில் இன்சுலின் சுரப்பைச் சீராக வைக்கிறது.
தேங்காய்ப்பால் வயிற்றுப் புண்களை (Ulcer) மிக விரைவாக ஆற்றும் வல்லமை கொண்டது. வளரும் குழந்தைகளுக்குத் தேவையான கால்சியம் சத்து மற்றும் பெரியவர்களுக்குத் தேவையான நார்ச்சத்து இதில் தாராளமாக நிறைந்துள்ளது.

வெயில் காலத்திற்கும் ஏற்ற உணவாகும். தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வந்தாலும் பலருக்கு மெஷின்களில் வேலை செய்வோர், வாகனங்களில் நீண்ட தூரம் பயணிப்போருக்கு உடல் உஷ்ணம் ஏற்படும் அவர்கள் எல்லாம் சாப்பிடலாம். இந்த வெந்தயக் கஞ்சியை உங்கள் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி - 1 கப்
- வெந்தயம் - 2 டேபிள் ஸ்பூன்
- பூண்டு - 15 பற்கள் (தோல் உரித்தது)
- சீரகம் - 1 டீஸ்பூன்
- தேங்காய்ப்பால் - 1 கப் (விருப்பப்பட்டால்)
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - 5 கப்
செய்முறை விளக்கம்
- முதலில் அரிசி மற்றும் வெந்தயத்தை நன்றாகக் கழுவி, சுமார் 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- பின் ஒரு பிரஷர் குக்கரில் ஊறவைத்த அரிசி, வெந்தயம், தோல் உரித்த பூண்டு பற்கள் மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- அடுத்து அதில் 5 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
- பிறகு குக்கரை மூடி மிதமான தீயில் (Medium Flame) 5 விசில் வரும் வரை நன்றாக வேக வைக்கவும்.
- இறுதியாக குக்கரில் அழுத்தம் குறைந்ததும் மூடியைத் திறந்து, கஞ்சியை ஒரு கரண்டியால் நன்றாக மசித்து விடவும்.
- தேவைப்பட்டால் கடைசியாகத் திக்கான தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கினால் மணம் வீசும் வெந்தயக் கஞ்சி தயார்.












Click it and Unblock the Notifications