ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.. திணை அரிசி குழிப் பணியாரம் செய்வது எப்படி?
Thinai Arisi Paniyaram Recipe in Tamil: இட்லி, தோசை என்பது தவிர்க்க முடியாத உணவாகிவிட்டது. என்னதான் புதிய புதிய வகை உணவுகளை ட்ரை செய்தாலும் இட்லி, தோசைக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இருந்தாலும் எப்போதும் இட்லி, தோசையா என்ற கேள்வியை எதிர்கொள்ளாத வீடுகளே இருக்காது எனலாம். இருப்பினும், ஈஸியாக சட்டென செய்யக் கூடியது என்பதால் எல்லோருடைய தேர்வாகவும் உள்ளது.
காலையில் இட்லி, தோசை, மதியம் சாப்பாடு சாம்பார், இரவில் மீண்டும் இட்லி, தோசை என அரிசி வகைகளை சாப்பிட்டு வெறுத்துப் போய்விட்டீர்களா.. ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் ருசியாக இருக்கும் உணவை தேடுகிறீர்களா.. அப்போ கண்டிப்பாக ஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவான இந்த திணை அரிசி பணியாரத்தை ட்ரை பண்ணுங்க.. சும்மா அசந்து போயிருவீங்க..

தேவையான பொருள்கள்
திணை அரிசி - 1 கப்
உளுந்து - 1/4 கப்
கடுகு - 1/4 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 1
சீரகம் - 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை
ஆயில் - தேவையான அளவு
செய்முறை
- திணை அரிசி மற்றும் உளுந்தை மூன்று மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், மிக்ஸியில் இட்லி மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் வதங்கியதும், அரைத்து வைத்துள்ள மாவில் இதனை சேர்த்து கலக்கவும்.
- மாவை நன்றாக கலந்த பிறகு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து குழிப் பணியாரம் பதத்திற்கு தயார் செய்து கொள்ள வேண்டும்.
- குழிப் பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு, மாவை ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு முறுகலாக சுட்டு எடுத்தால் ஆரோக்கியம் நிறைந்த, துவை மிகுந்த திணை அரிசி குழிப் பணியாரம் ரெடி.
- அப்புறம் என்ன அலுவலகத்தில் இருந்து வரும் கணவருக்கும், பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கும் இதனை செய்து கொடுத்து அசத்துங்க..












Click it and Unblock the Notifications