பாத்திரம் விலக்க ஒரு நண்பரை ரெடி செய்யுங்கள்...
அம்மா அப்பா, தங்கை, அண்ணன், அக்கா, குடும்பத்தைவிட்டு எங்கேயோஉலகின் ஒரு மூலையில் வசிக்கிறீர்களா?
தீபாவளி என்றதும் குடும்பமும் நம்ம ஊர் சாப்பாடும் நினைவுக்குவந்துவிட்டதா?
கொஞ்சம் பொறுமை இருக்கிறதா, பாத்திரம் விலக்க நண்பர் உடன் இருக்கிறாரா.சமையலுக்கு ரெடியாகுங்கள். இங்கே சில அட்டகாசமான ஐயிட்டங்களை மிகமிக எளிய முறையில் செய்வது குறித்து விளக்கியுள்ளோம்.
முயற்சி செய்து பாருங்கள். ஆல் த பெஸ்ட்.
கலக்கலான கேரட் அல்வா:
தேவையான பொருட்கள்:
- கேரட் : கால் கிலோ
- சர்க்கரை : தேவையான அளவு
- முந்திரிப் பருப்பு : தேவையான அளவு
- உலர்ந்த திராட்சை : தேவையான அளவு
- நெய் : 200 கிராம்
செய்முறை:
காரட்டை மிகச்சிறு சிறு துண்டுகளாக சீவி வைத்துக் கொள்ளவும். சர்க்ரையை நீருடன் சேர்த்து கடாயில் கொதிக்க வைத்து பாகு செய்து கொள்ள வேண்டும்.முந்திரிப் பருப்பை நெய் ஊற்றி பொன் நிறமாக வறுத்து வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
சீவி வைக்கப்பட்ட காரட்டை தயர் செய்து வைத்துள்ள பாகுடன் கலந்து கடாயில் போட்டு தொடர்ந்து கிளறி வர வேண்டும். அந்த கலவையில் நெய்யையும்ஊற்றி கிளறவும். வறுத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பையும், உலர்ந்த திராட்சையையும் போட்டு கிளறி தேவையான பதம் வந்தவுடன் இறக்கிவிடவும்.
சூப்பர் டேஸ்ட் கேரட் அல்வா ரெடி.