மகா சிவராத்திரி:

Subscribe to Oneindia Tamil

மூம்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானுக்காக கொண்டாடப்படுவது சிவ ராத்திரி.

மாசி மாதத்தில் திரயோதசி திதியில் பிரதோஷத்தின்போது சுக்கிலபட்சத்தில் (தேய்பிறை) வருகிற பிரதோஷம் சிவபெருமானுக்கு சிறப்புடையது. அன்றையதினம் சிவராத்திரி என அனைவராலும் கொண்டாடப்படுகிற நாளாகும்.

சிவராத்திரியின் சிறப்புகள்:

வில்வித்தையில் ஈடு இணையற்றவனான அர்ஜூனன் தவம் செய்து பாசுபதம் (பசுபதிஎன்றால் சிவன் என்று பொருள்) அஸ்திரத்தை பெற்றதும், கண்ணப்பநாயனார் சிவலிங்கத்திலிருந்து ரத்தம் வடிவதைக் கண்டு தன் கண்ணை பெயர்த்தெடுத்து வைத்து முக்தி அடைந்ததும், பகீரதன் மிகக் கடும் தவம் செய்து கங்கையைபூமிக்கு கொண்டு வந்ததும்,

தன் மீது அளவிலா பக்தி கொண்டிருந்த மார்க்கண்டேயனுக்காக எமதர்மனையே சிவ பெருமான் சம்ஹாரம் செய்ததும், பார்வதி தேவி தவமிருந்தி சிவனுக்குஇடப் புறம் இடம் பெற்று சிவனையே உமையொரு பாகனாகச் செய்ததும் இந்த புண்ணிய நாளில் நிகழ்ந்தது என்பது நமது புராணத்திலிருந்து தெரிய வருகின்றன.

பூஜைகள்:

சிவராத்திரியன்று சிவத் தலங்களில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். ஒரு வில்வ இலை கொண்டு சிவனுக்கு பூஜை செய்வது கோடிக்கணக்கானமலர்கள் கொண்டு அர்ச்சனை செய்வதற்கு சமமாகும். அன்று சாப்பிடாது விரதம் இருந்து கண் விழித்து சிவன் தோத்திரங்களை சொல்வது மிகவும் சிறந்தது.

தான தர்மங்கள் செய்வது, தெய்வத் திருத்தலங்களுக்கு யாத்திரை செல்வது, பல வகையான நோன்புகள் மேற்கொள்வது, விரதங்கள் இருப்பதுபோன்றவற்றால் ஏற்படும் நற் பலன்கள், புண்ணியங்கள் சிவனை சிவன் ராத்திரியன்று வழிபடுவதால் ஏற்படும் புண்ணியத்திற்கு நிகராகாது எனவேதங்களும், புராணங்களும் கூறுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+