Karadaiyan Nonbu 2026: இன்று காரடையான் நோன்பு! தாலிச் சரடு மாற்றிக் கொள்ள உகந்த நேரம் எது?
சென்னை: மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் வேளையில், சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும், தடையற்ற மகிழ்ச்சிக்காகவும் கடைபிடிக்கும் உன்னத விரதமே காரடையான் நோன்பு.
யமதர்மனிடமிருந்து போராடி தன் கணவன் சத்தியவானின் உயிரை மீட்ட சாவித்திரியின் தியாகத்தைப் போற்றும் இந்த விரதம், இந்த ஆண்டு மார்ச் 14, 2026 (சனிக்கிழமை) இன்று கடைபிடிக்கப்படுகிறது.

முக்கிய வழிபாட்டு நேரங்கள்
விரதம் தொடக்கம்: காலை 06:48 மணி.
சரடு மாற்ற நல்ல நேரம்: காலை 07:35 முதல் 08:20 வரை.
வழிபாட்டு நேரங்கள்: காலை 07:35 - 08:20 , மாலை 06:00 - 08:00 , இரவு 09:00 - 10:00.
விரதம் நிறைவு: மார்ச் 15, அதிகாலை 01:08 மணி.
வழிபாட்டு முறை
அதிகாலையில் மஞ்சள் பூசிக் குளித்து விரதத்தைத் தொடங்க வேண்டும். நாள் முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பு, முடியாதவர்கள் உப்பு, புளி சேர்க்காத உணவை உட்கொள்ளலாம்.
வீட்டுப் பூஜை அறையில் காமாட்சி அம்மன் படத்தின் முன் விளக்கேற்றி, அம்மன் திருவடியில் மஞ்சள் சரடை வைத்து வேண்ட வேண்டும். காமாட்சி அம்மனுக்கு கார அடை, இனிப்பு அடை, வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம் மற்றும் முக்கியமாக 'உருகாத வெண்ணெய்' ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும்.
பூஜை முடிந்ததும், கணவர் கையால் மஞ்சள் சரடைத் தன் கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். கணவர் அருகில் இல்லாதவர்கள் மூத்த சுமங்கலிகள் கையால் கட்டிக் கொண்டு ஆசி பெறலாம். கன்னிப் பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டித் தாமே சரடு கட்டிக் கொள்ளலாம். அக்கம் பக்கத்து சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு, பூ, தாலிச் சரடு கொடுத்து ஆசி பெறுவது கூடுதல் பலன் தரும்.
சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம்
"உருகாத வெண்ணெயும் ஓரடையும் நான் நூற்றேன், ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும்."
"தோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம், பர்துஹு ஆயுஷ்ய ஸித்யர்த்தம் சுப்ரீதா பவ ஸர்வதா."
இந்த உன்னத நாளில் விரதமிருந்து வழிபடக் குடும்பத்தில் ஒற்றுமையும், செல்வ வளமும் பெருகும் என்பது ஐதீகம்.












Click it and Unblock the Notifications