திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல் 28: இறைவன் எளிமையானவன்! ஓலை குடிசைக்கும் செல்வார்!
சென்னை: மார்கழி மாதம் 28-ஆம் நாள் இன்று! "குறையொன்றுமில்லாத கோவிந்தா" என்ற சொற்றொடர், கண்ணனுக்கு ஒரு குறை இருந்து, அது பின்னர் நீங்கியதாகச் சுட்டுகிறது. அப்படியென்றால், அந்தக் குறை என்ன?

ராம அவதாரத்தில், ராம பட்டாபிஷேகம் நடந்தது. இதில் வால்மீகி ஓர் ஆர்வத்தில் ஒரு குறிப்பை எழுதினார்: இந்திர லோகத்தின் எட்டு திசை காவலர்கள் பட்டாபிஷேகம் நடத்தியது போல, அயோத்தியில் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், காத்யாயனர், ஸுயஜ்ஞர், கவுதமர், விஜயர் ஆகிய எட்டு முனிவர்கள் ராமருக்குப் பட்டாபிஷேகம் செய்ததாக அவர் குறிப்பிட்டார். இது ராமனுக்குக் குறையாகப் பட்டது.
இந்திரனை வென்று 'இந்திரஜித்' பட்டம் பெற்றவனைத் தம் தம்பியான லட்சுமணன் வென்றான். அப்படிப்பட்ட கீழான இந்திரனுடன் தம்மை ஒப்பிட்டது தவறு என ராமர் கருதினார். அதுமட்டுமின்றி, கௌதமர் மனைவி அகலிகையுடன் தவறி நடந்த இந்திரனுடன் ஒப்பிடலாமா? என்பதும் ராமரின் பெரும் குறையாக இருந்தது.
கிருஷ்ண அவதாரத்தில் இந்தக் குறை நீங்கியது. ஆயர்கள் தனக்குச் செய்த பூஜையை நிறுத்தியதால் சீற்றமடைந்த இந்திரன் பெரும் மழை பொழியச் செய்தான். அப்போது கண்ணன் கோவர்தனகிரியைக் குடையாகத் தூக்கி மக்களைக் காத்தார். இதைக் கண்ட இந்திரன், கண்ணனின் காலில் பணிந்து மன்னிப்புக் கோரினான்.
இப்படியாக, ராம அவதாரத்தில் ஏற்பட்டக் குறை கிருஷ்ண அவதாரத்தில் நிவர்த்தி செய்யப்பட்டதால், ஆயர்குலப் பெண்கள் மகிழ்ந்து கண்ணனை "குறையொன்றுமில்லாத கோவிந்தா" எனப் போற்றிப் பாடினர்.
திருப்பாவை பாடல் 28
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: குறையற்ற கோவிந்தனிடம் பக்தர்கள் தங்கள் பக்தியைத் தெரிவித்தனர். தாங்கள் பசுக்களை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்ணும் எளிய, அறிவற்ற ஆயர்கள் என அடையாளப்படுத்தினர். எனினும், கோவிந்தனைத் தலைவனாகக் கொண்டதால் வைகுண்டம் தங்கள் பிறவிப்பயன் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்ததோடு, இறைவனுடனான உறவை யாராலும் பிரிக்க முடியாது எனவும் வலியுறுத்தினர்.
விரத முறைகளை அறியாதவர்கள் என்றும், கண்ணா, மணிவண்ணா, கருணாகரா என உரிமையுடன் அழைத்ததற்காகக் கோபிக்க வேண்டாம் என வேண்டினர். தங்கள் நோன்பை ஏற்று அருள இறைவனைப் பிரார்த்தித்தனர்.
திருப்பள்ளியெழுச்சி பாடல் 8
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டித்
திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
பாடல் விளக்கம்: பக்தர்களை ஆட்கொண்டு, இனிய அருள்பவராக சிவபெருமான் போற்றப்படுகிறார். பார்வதியுடன் அடியவர்களின் இல்லங்களுக்கு எழுந்தருளும் அவர், உலகைப் படைத்து, நடுநாயகமாக நின்று, அழிக்கும் கடவுளாகவும் விளங்குகிறார். மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகியோராலும் அறிய முடியாதவர் சிவன் என்பது ஐதீகம்.
தன்னை அறிய முற்பட்டபோது நெருப்பாகத் தோன்றி திருப்பெருந்துறையைக் காட்டி, அந்தணர் வேடத்தில் வந்து பக்தர்களை ஆட்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இறைவன் எளிமையானவர் என்பதால், செல்வந்தர், ஓலைக் குடிசைவாசி என பாகுபாடின்றி அனைவருக்கும் அருள்பவர். அவரை வணங்க நல்ல உள்ளம் மட்டுமே போதும் என்பதே இதன் மையக்கருத்து. உலகம் செழிக்க அவர் துயில் எழவேண்டுமென அடியவர்கள் பிரார்த்திக்கின்றனர்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications