திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 15: தோழிகளிடையே செல்ல சண்டை! சுவாரஸ்யமா இருக்கே!
சென்னை: மார்கழி மாதம் 15-ஆம் நாள் இன்று! ஒரு பாடலை இரு தரப்பினர் பாடுவது போல், அவர்களின் பெயர்களை குறிப்பிடாமலே இனிமைப்பட பாடியிருக்கிறாள் ஆண்டாள்! பெண்களுக்கு பேசக் கற்றுத் தரவா வேண்டும். இந்த பாடல் ஒரு பெண்ணை மற்ற பெண்கள் கிண்டல் செய்யும் வகையில் நகைச்சுவையாக பாடப் பெற்றுள்ளது.

திருப்பாவை பாடல் 15
எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: நீண்ட நேரம் காத்திருந்த தோழியை மற்றவர்கள் எழுப்ப, அவள் கோபத்துடன், "என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுவேன்," என பதிலளித்தார்.
நீண்ட உறக்கத்திற்குப் பின் கோபப்படும் அவளைத் தோழிகள் கிண்டல் செய்ய, "எனக்குப் பேசத் தெரியாது; நீங்களே பேச்சில் திறமைசாலிகள்; நான் ஏமாற்றுக்காரிதான்," என்று அவர் கேலியாகக் கூறினார்.
முன்னமே எழுந்திருந்த தாங்கள், அவளிடம் இல்லாத சிறப்பு என்னவென்று வினவ, "நான் மட்டும் எழாததுபோல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா?" என அவர் எதிர் கேள்வியெழுப்பினார்.
முடிவாக, வெளியே வந்து மற்றவர்களை எண்ணிப் பார்த்துவிட்டு, குவலையாபீடத்தை அழித்து எதிரிகளை வேட்டையாடிய மாயக்கண்ணனை வணங்க உடன் வருமாறு அழைத்தனர்.
திருவெம்பாவை பாடல் 15
ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: ஓர் ஆழமான பக்தியில் திளைக்கும் பெண், சிவபெருமானை 'எம்பெருமான்' என இடையறாது அழைக்கிறாள். அவரது புகழை இடைவிடாமல் பேசும் போது, அவளது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாகப் பெருகுகிறது. இந்தத் தெய்வீகப் பரவச உலகில் இருந்து பூவுலகை முற்றிலும் மறந்துவிடுகிறாள்.
அவரது பக்தியின் தீவிரம் எவ்வளவு என்றால், விண்ணிலிருந்து எந்த தேவன் வந்தாலும் அவள் வணங்கமாட்டாள். சிவபெருமான் ஒருவரே தனது தெய்வம் என்ற உறுதியில் மெய்மறந்து நிற்கிறாள். இவளது அசைக்க முடியாத பக்தியைப் போலவே, நம்மையும் ஆட்கொள்ளக் காத்திருக்கும் சிவனின் திருவடிகளைப் பணிந்து, பூக்கள் நிறைந்த குளங்களில் நீராடி, நாமும் அந்த தெய்வீக அனுபவத்தை அடைவோம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications