திருப்பதியில் "இந்த" தேதியில் விஐபி தரிசனம் ரத்து- தேவஸ்தானம் தகவல்
திருப்பதி: ஜனவரி மாதத்தில் நடக்கும் பல்வேறு பண்டிகைகள், ஆன்மீக நிகழ்ச்சிகளை முன்னிட்டு விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து பக்தர்களும் இந்த அறிவிப்பை மனதில் கொண்டு தேவஸ்தான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் (டிசம்பர்), ஜனவரி மாதத்தில் நடக்கும் பல்வேறு பண்டிகைகள், ஆன்மிக நிகழ்ச்சிகளை முன்னிட்டு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 23-ஆம் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், 29-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி, 30-ஆம் தேதியில் இருந்து ஜனவரி மாதம் 8-ஆம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் தரிசனம், ஜனவரி 25 ஆம் தேதி ரத சப்தமி விழாக்கள் நடக்கின்றன.

மேற்கூறிய தினங்களுக்கு முன்தினங்களில், நெறிமுறையின் அடிப்படையில் மட்டுமே அதிகாரப்பூர்வ வி.ஐ.பி.க்களுக்கு சாமி தரிசன அனுமதி வழங்கப்படும். மற்ற யாருக்கும் விஐபி பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது.
விஐபி தரிசனமும் ரத்து செய்யப்படும். அனைத்து பக்தர்களும் இந்த அறிவிப்பை மனதில் கொண்டு தேவஸ்தான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications