Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி, ஸ்ரீரங்கம் கோயில்களில் நாளை வைகுண்ட ஏகாதசி! சொர்க்கவாசல் திறப்பு நடைமுறை எப்படி வந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பதி, ஸ்ரீரங்கம், சென்னை உள்ளிட்ட கோயில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நாளை அதிகாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த சொர்க்கவாசல் திறக்கும் முறை ஏன் உருவானது தெரியுமா?

திருப்பதி ஏழுமலையான் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், முகப்பேர் சந்தான சீனிவாச கோயில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோயில்களிலும் நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

Vaikunta Ekadasi 2025

அதாவது ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி திதியில் இந்த சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி. இதையொட்டி நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது.

சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் வழியாக நுழைந்து இறைவனைத் தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை. இந்த குறிப்பிட்ட நாளில் மட்டும் எதற்காக சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

ஏன் இந்த நாளில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது என்பதை பார்க்கலாம். முதல் கதையின்படி, விஷ்ணுபகவான் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, அவரின் இரு காதுகளில் இருந்தும் மது, கைடபர் என்னும் இரு அசுரர்கள் தோன்றினர். தேவர்களைத் துன்புறுத்திய அவர்களை அடக்க தேவர்கள் திணறினர். விஷ்ணுவின் சக்தியால் உருவான அவர்களை, அவரால் மட்டுமே அடக்க முடியும் என்பதால், தேவர்கள் திருமாலிடம் முறையிட்டனர்.

தேவர்களின் வேண்டுதலை ஏற்று, பெருமாள் மது மற்றும் கைடபருடன் போரிட்டார். பெருமாளின் சக்திக்கு ஈடுகொடுக்க முடியாமல் அசுரர்கள் சரணடைந்தனர். "தங்கள் சக்தியால் உருவான எம்மீது கருணை காட்ட வேண்டும்" என வேண்ட, பெருமாள் அவர்களை வைகுண்டத்தில் தன்னுடன் வசிக்க அருளினார்.

தங்களுக்குக் கிடைத்த இப்பேறு மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்பிய மது-கைடபர்கள், பெருமாளிடம் ஒரு வரத்தைக் கோரினர். "வைகுண்ட ஏகாதசி அன்று, திருவரங்க வடக்கு வாசல் வழியாக அர்ச்சாவதாரத்தில் தரிசிப்பவர்களுக்கும், பின்தொடர்பவர்களுக்கும் அனைத்துப் பாவங்களும் நீங்கி முக்தி கிடைக்க வேண்டும்" என வேண்டினர். இறைவனும் ஏற்றார்.

இரண்டாம் கதையின்படி, திருமால் தன் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மனைப் படைத்தார். உடலில் இருந்து வெளிப்பட்ட பெருமிதம் பிரம்மனுக்கு ஏற்பட்டது. அதே சமயம், திருமாலின் காதுகளில் இருந்து வெளிப்பட்ட மது-கைடபர்கள், அகங்கார பிரம்மனைக் கொல்ல முயன்றனர். அவர்களைத் தடுத்த திருமால், "பிரம்மனைக் கொல்ல வேண்டாம்; வேண்டிய வரத்தைத் தருகிறேன்" என்றார்.

திருமாலின் வார்த்தைகளைக் கேட்ட அசுரர்கள், "நீ என்ன எங்களுக்கு வரம் கொடுப்பது? நாங்களே உங்களுக்கு வரம் தருகிறோம்" என்று ஆணவத்துடன் கூறினர். அறியாமையைக் கண்டு சிரித்த திருமால், "அகங்காரம் கொண்ட நீங்கள் என் கையால் மாண்டு, ராட்சசர்களாகப் பிறக்க வேண்டும்" என்று சாபமிட்டார். அசுரர்கள் திகைத்து, அறியாமைக்கு வருந்தினர்.

அசுரர்கள், "இறைவா, உங்களோடு ஒரு மாதம் போரிட்டு, பின்னர் வதம் செய்யப்பட்டு சித்தியடைய வேண்டும்" என திருமாலிடம் வேண்டினர். அவர்களின் விருப்பப்படியே, திருமால் ஒரு மாதம் போரிட்டு அவர்களை வதம் செய்தார். வதம் செய்யும் தருணத்தில், "இறைவா! தாங்கள் வசிக்கும் பரமபதத்தில் நாங்களும் நித்திய வாசம் செய்ய வேண்டும்" என்று அசுரர்கள் கோரினர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று, மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று, வைகுண்டத்தின் வடக்கு வாசலைத் திறந்து திருமால் உள்ளே அனுமதித்தார். அங்கே அனந்தனின் திவ்ய வடிவைக் கண்டதும் அசுரர்கள் ஆனந்தித்தனர். தங்களுக்குக் கிடைத்த இந்தப் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்பி, "இறைவா! வைகுண்ட ஏகாதசி அன்று உங்களைத் தரிசிக்கும் அனைவருக்கும் மோட்சம் கிடைக்க வேண்டும்" என்று வேண்ட, இறைவனும் அதை ஏற்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+